TamilSaaga

சிங்கப்பூரில் பயனளித்த கட்டுப்பாடு – இன்று உள்ளூரில் யாருக்கும் தொற்று இல்லை

சிங்கப்பூரில் ஏப்ரல் 25ம் தேதிக்கு பிறகு உள்ளூரில் இன்று (ஜூலை 10) ஒரு தொற்று பாதிப்பு கூட இல்லாத நாளாக பதிவாகியுள்ளது. இந்த செய்தி தற்போது மக்கள் மனதில் பெரிய அளவில் நம்பிக்கை மீண்டும் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் அரசு பிறப்பிக்கும் பல நடவடிக்கைகள் மாற்றும் மக்கள் தரும் ஆதரவால் இந்த நிலை சாத்தியமாகியுள்ளது.

இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பலரிடம் தொற்று பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை கடுமையாகிவருகின்றது சிங்கப்பூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 62,684 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே சமயம் சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,212ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 170 பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை 36 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

தொற்றின் அளவை குறைக்க சிங்கப்பூர் அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி முதல் மேலும் பல தளர்வுகள் சிங்கப்பூரில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts