TamilSaaga

எதிர்காலத்தில் எந்த சவால் வந்தாலும் வெல்வோம் – சிங்கப்பூர் தேசிய தினப் பாடல்

சிங்கப்பூரில் தேசிய தினத்தை முன்னிட்டு பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“The Road Ahead” என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த பாடலை லின்யிங் மற்றும் இவான் லோ ஆகியோர் வரிகளை எழுதி இசையமைத்துள்ளனர்.

சிங்கப்பூர் தனது வரலாற்றில் எப்போதுமே பல கஷ்டமான சூழல்களை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இனி வரும் காலங்களிலும் சிங்கப்பூர் எதிர்கொள்ளும் அனைத்து கடினங்களையும் நிச்சயம் வென்று மேலும் முன்னேறும். நம்மால் எதையும் தாண்டிச் சென்று வெல்ல முடியும் போன்ற கருத்துக்களை இந்த பாடல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக சிறப்பான முறையில் உயிரோட்டமான ஓவியங்கள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் பற்றி இதனை எழுதி இசையமைத்த லின்யிங் “சாவாலான, இந்த கடின சூழலில் சிங்கப்பூர் மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதை ஊக்குவிக்கும் கருப்பொருளில் இந்தப்பாடல் இயற்றப்பட்டது” எனக் கூறியுள்ளார்.

Related posts