TamilSaaga

“சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை” : இந்த ஆண்டு இரவு நேர பஜார் செயல்படுமா? – சிங்கப்பூர் STB விளக்கம்

சிங்கப்பூரில் தீபாவளிக்கு முன்னதாக லிட்டில் இந்தியாவில் கூட்ட நெரிசலைத் தடுக்கும் வகையில் கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த துறை சார்ந்த அதிகாரிகள் இன்று திங்கள்கிழமை (அக்டோபர் 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். அக்டோபர் 29 முதல் 31 வரை மாலை 6 மணி முதல் அதிகாலை 1 மணி வரையும், அதேபோல தீபாவளியை முன்னிட்டு (நவம்பர் 3) மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும் கேம்ப்பெல் லேன் மற்றும் செரங்கூன் சாலை சந்திப்பில் பிரபலமான நடைபாதை மூடப்படும் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) தெரிவித்துள்ளது.

இந்த ஒளியின் திருவிழாவிற்கு முன்னதாக லிட்டில் இந்தியாவில் அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “பாதசாரிகள்” சங்கேய் சாலை மற்றும் டன்லோப் தெருவில் உள்ள வேறு இரண்டு கிராசிங்குகளுக்கு திருப்பிவிடப்படுவார்கள்” என்று STB தெரிவித்துள்ளது. “இது வளாகம் முழுவதும் கூட்டம் பரவலாக இருப்பதாய் உறுதி செய்து மற்ற உச்சகட்ட இடங்களில் கூட்டம் சேர்வதை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

STB மேலும் கூறுகையில், நடைபாதையில் தங்கள் பொருட்களை வைக்காமல் இருப்பதை உறுதி செய்ய லிட்டில் இந்தியாவில் உள்ள வணிகர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும், ஏனெனில் இது பாதைகளை சீர்படுத்தி கூட்டம் தேவையின்றி சேர்வதை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. கடைக்காரர்கள் தங்கள் வருகையை விரிவுபடுத்துவதற்காக சில வணிகங்கள் தங்கள் இயக்க நேரங்களை நீட்டிக்கும். தொற்றுநோய்க்கு மத்தியில் முக்கிய இந்து பண்டிகை கொண்டாடப்படுவது இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இரவு பஜார் இடைநிறுத்தப்பட்ட நிலையில், உணவு திருவிழா, பாரம்பரிய இடங்களுக்கான சுற்றுப்பயணங்கள், சமையல் நிகழ்ச்சிகள், சில புதையல் வேட்டைகள் மற்றும் பல சிறந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related posts