TamilSaaga

‘மீண்டும் உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்’ – இந்தோனேஷியா புறப்பட மருத்துவ சாதனங்கள்

இந்தோனேஷியாவில் தற்போது கிருமி பரவல் அதிகமாக இருக்கும் காரணத்தினால் சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு தனது முதல் கட்ட அவசரகால மருத்துவ சாதனங்களை இந்தோனேசிய அனுப்பிய நிலையில் தற்போது இந்தோனேசியாவுக்கு 2-வது கட்டமாக அவசரகால மருந்துகளை அனுப்பி உள்ளது சிங்கப்பூர்.

இந்த பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூர் கடற்படைக் கப்பல் மூலம் இன்று காலை சாங்கி கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்வாய்வுக்கலன்கள் உள்ளிட்ட இதர மருத்துவ சாதனங்கள் இந்த முறை அனுப்பப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்றமுறை இந்த பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தோனேசிய அரசுடன் சிங்கப்பூர் அரசு கைகோர்த்து நிற்கும் என்று MFA (Ministry of Foreign Affairs) தெரிவித்துள்ளது.

“இந்தோனேசியாவின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, சிங்கப்பூர் அரசு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மற்றும் என் 95 முகமூடிகள், கையுறைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை ஆரம்பகாலத்தில் வழங்கியுள்ளது சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts