சிங்கப்பூரில் சீன் லீ யாங் என்ற 27 வயது நபர், HillView Rise’s Anytime என்ற உடற்பயிற்சி நிலையத்தின் கழிப்பறையில் ஒரு உளவு பார்க்கும் கேமராவை நிறுவியதற்காக அவருக்கு தற்போது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதர்ஷிப் வெளியிட்ட தகவலின்படி இந்த வழக்கு குறித்த நீதிமன்ற ஆவணங்களில், குற்றாவளி லீ, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) பட்டம் பெற்றார் மற்றும் இந்த குற்றத்தில் ஈடுபட்டபோது அவர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2020-ல், லீ ஷாப்பிங் செயலியான “லாசடா”-வில் இருந்து ஒரு ஆடை மாட்டிவைக்கும் கொக்கி போல இருக்கும் ஒரு ஸ்பை கேமராவை வாங்கியுள்ளார். அந்த ஸ்பை கேமராவில் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி ஒன்று இருந்தது மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களைச் சேமிக்க ஒரு SD கார்டு ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்ட லீ, அந்த கேமராவை ஆண்கள் சிறுநீர் கழிக்கும் இடத்தில் பொருத்தி திருட்டுத்தனமாக அந்த செயல்களை படம்பிடித்துள்ளார்.
லீ, யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் சில சமயங்களில் ஜிம்மில் உள்ள சில ஆண் கழிப்பறையில் கேமராவை நிறுவி அந்த கேமராவை பரிசோதிக்கத் தொடங்கினார். அவர் வாரத்தின் இரண்டு அல்லது மூன்று முறை வெவ்வேறு நேரங்களில் ஜிம்மிற்குச் சென்று இவ்வாறு செய்துள்ளார். எடுக்கப்பட்ட வீடியோகளை வீட்டிற்கு எடுத்து வந்து, ஆண்கள் சிறுநீர் கழிப்பதை பார்த்து மகிழ்ந்துள்ளார் அவர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த செயல் வெகுநாட்களாக செல்ல செல்ல கடந்த ஆகஸ்ட் 10, 2020 அன்று இரவு, ஜிம் கிளீனர் ஒருவர் சுத்தம்செய்யும் பணிக்காக கழிவறைக்கு சென்றபோது லீயின் கேமராவை அவர் கண்டுபிடித்தார்.
அதை உரிமையாளரிடம் கொடுத்த நிலையில் அவர் அண்ட் கேமராவை தனது மேசையில் வைத்துவிட்டு சென்றார். இதை கண்ட லீ, அவர் அங்கு இல்லாத சமயத்தில் தனது கேமராவை அங்கிருந்து எடுத்தார். மீண்டும் உரிமையாளர் வந்து கேமராவை தேடியபோது அது இல்லாததால் தனது ஜிம்மில் இருந்த CCTV காட்சிகள் மூலம் லீ தான் குற்றவாளி என்று கண்டறிந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.