SINGAPORE: சிங்கப்பூரில் லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவிகிதம் பேர் தங்கள் குடும்ப வறுமையை எண்ணி உழைத்து ஓடாய் தேய்கின்றனர். தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருக்கின்றனர்.
மிகச் சிலர் மட்டும், தங்கள் கடமைகளை, பொறுப்புகளை மறந்து, சொந்த நாட்டை விட்டு, வீட்டை விட்டு எதற்காக சிங்கப்பூர் வந்தோம் என்பதையே மறந்து விடுகின்றனர். குறிப்பாக சிலர் பெண்கள் மீதுள்ள மோகத்தில் தங்கள் சம்பளத்தையும், வாழ்க்கையையும் இழக்கின்றனர்.
அந்த வகையில், தற்போது சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தற்போது சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த ஊழியர் பாட்டியன் சோஹாக், என்பவர் விபச்சாரம் செய்யும் பெண்களை சிங்கப்பூரின் Geylang பகுதியில் தனது நண்பருடன் இணைந்து தேடியிருக்கிறார். இவர் சந்தித்த பெண்கள் சொன்ன கட்டணம் கட்டுப்படி ஆகாததால் எங்கும் செல்ல முடியாமல் இருந்திருக்கிறார்.
இப்படியொரு எண்ணத்தில் அலைந்தவர்களுக்கு, Geylang பகுதியில் சேரிலேயே அமர்ந்து தூங்கிய பெண் ஒருவர் கண்ணில் பட்டிருக்கிறார். அவரும் விபச்சாரம் செய்பவரே. ஆனால், சேரில் அசந்து தூங்கியிருக்கிறார். இதையடுத்து அப்பெண் அருகில் சென்ற பாட்டியன் சோஹாக், விபச்சாரத்துக்கு அழைத்துள்ளார். ஆனால், அப்பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் அசந்து தூங்குவதை அறிந்த பாட்டியன் சோஹாக், உடல் ரீதியாக அப்பெண்ணை மானபங்கம் செய்திருக்கிறார்.
பிறகு, அப்பெண்ணை அங்கிருந்து தூக்கிச் சென்று, அருகில் இருந்த புதர்களுக்கிடையே வைத்து ஆசை தீர உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். இவையனைத்தும் அதிகாலை 3.30 மணியளவில் நடந்துள்ளது. பிறகு, அப்பெண் காவல்துறையில் இதுகுறித்து புகாரளிக்க, வங்கதேச ஊழியர் பாட்டியன் சோஹாக் கைது செய்யப்பட்டார்.
பிறகு, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அந்த ஊழியருக்கு 3 வருட சிறைத் தண்டனையும், 3 சவுக்கடிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.