TamilSaaga

சிங்கப்பூர் யிஷுன் பகுதி.. கத்தியால் சரமாரியாக குத்திய வாலிபர் – 6 மணிநேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்

சிங்கப்பூரில் ஆபத்தான ஆயுதத்தால் மற்றொருவரை காயப்படுத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் 25 வயது நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2ம் தேதி சம்பவத்தன்று இரவு யிஷுன் தெரு 31ல் அந்த 25 வயது மற்றொருவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அன்றிரவு இரவு 11:40 மணியளவில் இந்த தாக்குதல் குறித்து போலீசாருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. போலீசார் அங்கு வந்தபோது பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் காணப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மார்பு மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது.

காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடிய போதிலும், போலீஸ் கேமராக்களின் மூலம் கிடைத்த படங்களின் உதவியுடன் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் மூலம் குற்றம் நடந்த ஆறு மணி நேரத்திற்குள் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இன்று அக்டோபர் 4ம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது தடியடி அல்லது மேலே உள்ள எந்தவொரு தண்டனையும் கலந்து அளிக்கப்படலாம். ஏன் அவர் கத்தியால் குத்தினார் என்பது குறித்து போலீசார் எந்தவித தகவலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts