TamilSaaga

சிங்கப்பூர் பூன் லே பகுதியில் நடந்த விபத்து.. சேதமடைந்த தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் லாரி – “தமிழ் சாகா வாசகர்” அனுப்பிய Exclusive வீடியோ

இன்று காலை சிங்கப்பூர் பூன் லே பகுதியில் ஏற்பட்ட ஒரு விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு ஊழியர்கள் உள்பட பிற ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்று எதிரே வந்த வாகனத்தோடு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சிங்கப்பூரில் பணியாற்றும் நமது தமிழ் சாகா வாசகர் ஒருவர் இந்த காணொளியை நம்மோடு பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 28.07.2022 காலை பூன் லே நெடுஞ்சாலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பதையும் இந்த காணொளியை நமக்கு அனுப்பிய தமிழ் சாகா வாசகர் கூறினார். தமிழரான அந்த வாசகர் ஒரு ஓட்டுநர் என்பதால் உரிய பாதுகாப்போடு பிறரும் வாகனங்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை.. துணிச்சலோடு பாய்ந்து காப்பாற்றிய “Super Man” – வைரலாக பகிரப்படும் வீடியோ

குறிப்பாக ஊழியர்களை ஏற்றி செல்லும் வாகனத்தை இயக்குபவர்கள் மிகுந்த கவனத்தோடு தங்களது வானங்களை இயக்கினால் அனைவருக்கும் அது பாதுகாப்பை அளிக்கும் என்றும் அவர் கூறினார். சிங்கப்பூரில் பணியிடங்களுக்கு செல்லும் பல தொழிலாளர்கள் இதுபோன்ற சிறிய வகை லாரிகளில் தான் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts