TamilSaaga

“லாரன்ஸ் வோங் எனும் நான்…” புதிய பிரதமரை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள சிங்கப்பூர் – மெல்ல மெல்ல எதிரொலிக்கும் 50 லட்சம் மக்களின் “பேராதரவு” குரல்

சிங்கப்பூரில் நான்காம் தலைமுறைக் குழுவின் (4G) தலைவராக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தேர்வு செய்யப்பட்டுள்ளது, ஆசிய அளவில் மட்டுமின்றி, உலகளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதன் மூலம், அமைச்சர்கள் அனைவரின் ஆதரவும் லாரன்ஸ் வோங்கிற்கு இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தன்முன்னே இருந்த அனைத்து சவால்களையும் உடைத்தெறிந்துள்ளார்.

அதை மிக சாதுர்யமாக கையாண்டதன் விளைவாகவே, அமைச்சர்கள் மத்தியில் அவருக்கு தனி மாஸ் உருவாகியிருக்கிறது. இதுவே, சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பும் அவருக்கு பிரகாசமாகியுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் BMS, ACMV/HVAC மற்றும் Chemical Engineer துறைகளில் பணியாற்ற ஆட்கள் தேவை – திருச்சியில் நேர்முகத் தேர்வு

குறிப்பாக, பெருந்தொற்று நேரத்தில் அவரது செயல்பாடுகள் சக அமைச்சர்கள் மட்டுமின்றி, அவருக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளையும் வியக்க வைத்தது.

கல்வி அமைச்சகம், தேசிய வளர்ச்சி, தகவல் தொடர்பு அமைச்சகம், கலாச்சாரம், சமூக, இளையர் அமைச்சகம், தற்காப்பு ஆகியவற்றில் அவர் தனது நிர்வாக திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சிங்கப்பூர் நாணய வாரியத்தின் துணைத்தலைவர், GIC வாரிய உறுப்பினர், மக்கள் செயல்கட்சியின் சமூக அறநிறுவனத்தின் தலைவர் என்று பல்வேறு துறைகளில் தனது ஆளுமைகளை லாரன்ஸ் வோங் வெளிப்படுத்தியுள்ளார்.

“நீங்கள் அவரைப் பார்க்கும்போது, ​​அவர் ஒரு தலைவர் என்று உணருவீர்கள். அவர் மிகவும் அமைதியானவர், நட்புடன் பழகுவார், எளிதில் மிகவும் அணுகக்கூடிய நபர், மென்மையானவர், புதிய தலைமுறையினரை ஈர்க்கக்கூடியவர்” என்று வோங் மீதான ஆதரவு வார்த்தைகள் சிங்கப்பூரில் இப்போதே ஒலிக்கத் தொடங்கிவிட்டன. 55 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூரில், பெரும்பாலானோரின் குரலாக லாரன்ஸ் வோங் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts