TamilSaaga

“Nurturing Parents, Bridging Teens” பெற்றோருக்கு இலவச ஆலோசனை.. சிங்கப்பூர் ஜமால் முஹம்மது மாணவர்கள் அசத்தல்

சிங்கப்பூரில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து பெற்றோர்களுக்கு இலவச ஆன்லைன் அலோசனை வகுப்பு ஒன்றை நடத்தினார்கள்.

சிண்டா துணையோடு கல்லூரி முன்னாள் மாணவர்கள் “Nurturing Parents, Bridging Teen” என்ற தலைப்பில் இந்த ஆன்லைன் அளோசனை நிகழ்ச்சியை நடத்தினார்கள். நேற்று காலை 10 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி சுமார் 12.30 வரை நடைபெற்றது.

இதுபோன்ற இணைய ஆலோசனை கூட்டங்களில் சுமார் 15 ஆண்டுகளுக்கு அனுபவம் பெற்ற சிறந்த சேவையாளர்களான திருமதி ஜகஜித் கார் மற்றும் திரு மணிவண்ணன் ஆகிய இருவரும் இந்த இணைய நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தினார்கள்.

மேலும் சிண்டாவின் அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த ஆலோசனை நிகழ்ச்சியை பொறுத்தமட்டில் பெற்றோர்களுக்கு ஆலோசனை மற்றும் இளையோருடன் சிறப்பான நல்லுறவு பின்பற்றுதல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த சிறப்பான நிகழ்ச்சியை பெற்றோரும் மாணவர்களும் பெரிதும் வரவேற்றனர்

Related posts