TamilSaaga

12 ஆண்டு போராட்டம்.. கைநழுவிப்போன கடைசி நம்பிக்கை – இந்திய வம்சாவளி நாகேந்திரனுக்கு சிங்கப்பூரில் “அடுத்த வாரம் தூக்கு”

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரணதண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு ஒத்திவைத்த நிலையில் அவரது மனுவை கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றம் நிராகரித்தது.

நாகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கடைசி நம்பிக்கையும் தவிடுபொடியானது, இந்நிலையில் வரும் ஏப்ரல் 27ம் தேதி புதன் கிழமை நாகேந்திரன் தூக்கிலடப்படுவர் என்ற தகவலை அவரது முன்னாள் வக்கீல் திரு. ரவி தெரிவித்துள்ளார் என்று இந்திய ஊடகமான India Today செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் கடந்த 2010ம் ஆண்டு 43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.

முந்தைய நீதிமன்ற விசாரணையில், அவரது IQ 69-ஆக இருந்தது என்றும், இது சர்வதேச அளவில் அறிவுசார் குறைபாடு என அங்கீகரிக்கப்பட்டது என்றும் நாகேந்திரன் சார்பாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆனால் சிங்கப்பூரின் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்களை மீறி அவர், தான் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்தே நாகேந்திரன் செயல்பட்டார் என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

2 வருடங்கள் வெளிநாடு ஊழியர்கள் பட்டபாடுக்கு கிடைத்த வெகுமதி… கண்ணீர் மல்க வரவேற்ற சாங்கி விமான நிலையம் – மார்ச் மாதம் புதிய “ரெக்கார்டு”

அவருடைய குடும்பம், மலேசிய அரசு, மற்றும் தன்னார்வலர்கள் பலர் நாகேந்திரனின் தூக்கு தண்டனையை நிறுத்தவேண்டும் என்று பல சிங்கப்பூர் தலைவர்களிடம் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அவர்களது எந்தவித முயற்சியும் பலனளிக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.

சிங்கப்பூர் Seahill குடியிருப்பில் ‘கழிவறையில்’ உல்லாசம் அனுபவித்த ஜோடி.. வடிவேலு பாணியில் கையும் களவுமாக பிடித்த ஊழியர் “கணேசன்” – இறுதியில் அவருக்கே ‘ஆப்பு’ வைத்த பேராசை!

சுமார் 12 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நாகேந்திரனின் தூக்கு தண்டனை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்களுடைய கடைசி நம்பிக்கையும் பொய்த்துப்போன நிலையில் நாகேந்திரன் வரும் ஏப்ரல் 27ம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பு : இந்த செய்தி இந்தியாவில் உள்ள பிரபல India Today செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை கொண்டு எழுதப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts