TamilSaaga

“சிங்கப்பூரில் நற்பணி பேரவை” : இனப்பாகுபாடு, ஊதிய பிரச்சினை குறித்து கலந்தாய்வு செய்த இந்திய தலைவர்கள்

சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரையை மேற்கோள்காட்டி நேற்று இரவு இந்திய சமூக தலைவர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கு நடைபெற்றது.

இந்திய மக்கள் சங்க செயல்பாட்டு நிர்வாக குழு (நற்பணி பேரவை) ஏற்பாடு செய்த இரண்டு மணி நேர மெய்நிகர் அமர்வில், பல்வேறு இந்திய அமைப்புகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இனப்பாகுபாடு தொழில் ரீதியான பல விஷயங்கள் பேசப்பட்டன.

இந்த நிகழ்வின் போது கடந்த ஆண்டு முதல் அடிமட்ட தன்னார்வலரான பணியாற்றி வரும் லோஷினி பேசியபோது “பள்ளியில் எங்கள் குடிமை பாடத்திட்டத்தை இன சீரமைப்பை அகற்றுவதற்கும் சிறந்த புரிதலை ஊக்குவிப்பதற்கும் எவ்வாறு மறுசீரமைக்க முடியும் என்பது குறித்த எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இந்த அமர்வு எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது” என்று கூறினார்.

இந்த அமர்வின் தொடக்கத்தில், பங்கேற்பாளர்கள் வேலை வாய்ப்புகள் மற்றும் பணியிடத்தில் இன பாகுபாடு மற்றும் சீன சலுகை பற்றிய முன்னோக்குகள் பற்றிய தங்களுடைய பிரச்சினையை கேள்விகளாக எழுப்பினர்.

இந்த நற்பணியில் ஆலோசகர்களாக செயல்பட்டு வரும் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி, பிரச்சினைகள் குறித்து விளக்கங்களை வழங்கினர். மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கம் ஆராயக்கூடிய சாத்தியமான முன்னெடுப்புகளை பற்றி விவாதித்தனர்.

பணியிட பாகுபாடு பிரச்சினையில், நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் “இன பாகுபாடுகளுக்கு ஒரு உருமறைப்பு அல்ல” என்பதை உறுதி செய்ய வேலைகளுக்கான மொழித் தேவைகளைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

Related posts