TamilSaaga

சிங்கப்பூர் வந்து ஹோட்டல்களில் தங்கும்போது தொற்று உறுதியானால் என்ன செய்வது? – LTA வெளியிட்ட புதிய விதிகள்

சிங்கப்பூருக்கு வந்திறங்கி ஹோட்டலில் தங்கும் பயணிகளுக்கு பெருந்தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டால், அல்லது பெருந்தொற்று நோயாளியின் நெருங்கிய தொடர்பில் அடையாளம் காணப்பட்டு, உடல்நல அபாய எச்சரிக்கையைப் பெற்றவர்கள் (HRW) வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 20) முதல் அந்த ஹோட்டல் அறைகளில் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என்று சிங்கப்பூர் சுற்றுலா ஆணையம் தெரிவித்துள்ளது. PCR சோதனை மூலம் நேர்மறை சோதனை செய்தவர்கள் தங்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்பட அவர்களுக்கு IO (Isolation Order) வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு ரஜினிகாந்த் பாணியில் “Mass” பதில்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு 10 நாட்களுக்கு IO வழங்கப்படும், ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு 14 நாட்களுக்கு IO வழங்கப்படும். அதன்பிறகு, அவர்கள் கூடுதல் பரிசோதனையின்றி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. VTL மூலம் வருபவர்கள் சிங்கப்பூருக்குள் வந்த 7 நாட்களுக்கு பல ART சோதனைகளை எடுக்கவேண்டும். ஆனால் VTL மூலம் வருபவர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி இந்த IO வழங்கப்பட்டால் அவர்கள் அந்த அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் சிங்கப்பூரில் வீடு உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்கள், அங்கு தங்களை மாற்றம் செய்ய ஹோட்டல்களின் உதவியை நாட, சுகாதார அமைச்சகம் அவர்களை தங்களுடைய தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தங்களுடைய அறைகளில் குணமடையும் விருந்தினர்களுக்கு டெலிமெடிசின் ஆதரவு கிடைக்கும், ஆனால் ஹோட்டல்கள் அல்லது பராமரிப்பு வசதிகளில் தேவையான நீட்டிக்கப்பட்ட தங்குதல் உட்பட, மீட்பு, சோதனை மற்றும் சிகிச்சை தொடர்பான செலவுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

சிங்கப்பூர் வருகையின்போது HRW பெறும் பயணிகள் தங்கள் அறை அல்லது வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதே நாளில் ART எடுத்து முடிவை இந்த இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் தங்கள் இயல்பான செயல்பாடுகளைத் தொடரலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் வெளியே செல்வதற்கு முன் இரண்டாவது முதல் ஏழாவது நாள் வரை ART-நெகட்டிவ் சோதனையைத் தொடர வேண்டும்.

ஆனால் அவர்கள் நேர்மறை சோதனை செய்தால், அவர்கள் அடுத்த 72 மணிநேரத்திற்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதன் பிறகு ART மூலம் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். முடிவு எதிர்மறையாக இருந்தால் மட்டுமே அவர்களால் இயல்பான செயல்பாடுகளைத் தொடர முடியும் மற்றும் எந்த நேரத்திலும் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts