TamilSaaga

தஞ்சோங் பகார் சாலையில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் ஏற்பட்ட தீ… அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட வாடிக்கையாளர்கள்!

சிங்கப்பூரில் ஆறு வருடங்களாக செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் திடீரென்று ஏற்பட்ட தீயின் காரணமாக அங்குள்ள மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சிங்கப்பூரின் தஞ்சோங் பகார் ரோட்டில் அமைந்துள்ள ஜப்பான்- இத்தாலிய உணவகத்தில் அக்டோபர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சமையலறையில் ஏற்பட்ட தீ உணவகம் முழுவதும் பரவியது.

இதன் காரணமாக வாடிக்கையாளர் முப்பது பேர் மற்றும் ஊழியர்கள் 10 பேர் உணவகத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் சிங்கப்பூரின் தற்காப்பு படை மாலை 6.30 மணி அளவில் உடனடியாக உணவகத்துக்கு விரைந்தது. உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்த காரணமாக எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.

தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் யாருக்கும் எவ்வித காயம் ஏற்படவில்லை என்றாலும் உணவகம் தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் உணவகம் ஆனது வருகின்ற புதன்கிழமை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts