TamilSaaga

“இந்தோனேசியாவில் நிலநடுக்கம்” : சிங்கப்பூரிலும் பல இடங்களில் உணரப்பட்ட அதிர்வு – எச்சரிக்கும் SCDF மற்றும் SPF

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்குக் கடற்கரைக்கு அருகே இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) அன்று கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனமான BMKG தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 9.39 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரீஜென்சியில் இருந்து வடகிழக்கில் 17 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் BMKG தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் நிறுவனம் மேலும் கூறியது.

“சிங்கப்பூர் BTO திட்டம்” : பணியிடத்தில் ஏற்பட்ட விபத்து – Fork Liftல் இருந்து தூக்கி வீசப்பட்ட “வெளிநாட்டு தொழிலாளி” மரணம்

இந்தோனேசியாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் நமது சிங்கப்பூரிலும் நடுக்கம் உணரப்பட்டது. சாய் சீ (பெடோக்கிற்கு அருகில்), ஹூகாங், லாவெண்டர், புங்கோல் மற்றும் செங்காங் போன்ற வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மத்திய வணிக மாவட்டம் உட்பட பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது.

44 வயதான மேடம் லின் சுவா, 10வது மாடியில் உள்ள தனது ஹூகாங் பிளாட்டில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​காலை 9.45 மணியளவில் தனது சாப்பாட்டு மேஜை நடுங்குவதை உணர்ந்தார். மயக்கம் வருவது போல உணர்ந்த அவர், வேகமாக தன் மேசையின் ஓரங்களைப் பிடித்தவாறு அமர்ந்தார். மேலும் இணையம் முழுவதும் பலர் இந்த அதிர்வுகளை உணர்ந்ததாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) நிலநடுக்கத்தைப் பற்றிப் புகாரளிக்கும் பொதுமக்களிடமிருந்து தங்களுக்குப் பல அழைப்புகள் வந்ததாகக் கூறினர். மேலும் இந்த சம்பவத்தில் எந்த பகுதியிலும் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என்று SCDF மேலும் கூறியது. வீட்டிற்குள் இருக்கும் மற்றும் ஏதேனும் நடுக்கத்தை உணரும் பொதுமக்கள் மேஜைக்கு அடியில் தஞ்சமடைய வேண்டும் என்றும். கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது தொங்கும் பொருட்களிடம் இருந்து தள்ளி இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று காவல்துறை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

“நீதிபதிகள் பாரபட்சமானவர்கள்” : சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் ரவி மீது குற்றச்சாட்டு – என்ன சொல்கிறது AGC?

மேலும் எரிவாயு கசிவு ஏற்பட்டால், லிப்ட் அல்லது எந்த emergency விளக்கையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related posts