TamilSaaga

வந்தே பாரத் சேவை : பன்னாட்டு விமான டிக்கெட் விலையில் “புதிய” மாற்றம்

உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாக விமான சேவை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சிங்கப்பூர் அரசும் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை முடிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் சிங்கப்பூர் இந்தியாவிற்கு இன்னும் தனது எல்லைகளை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் அவசர தேவை உள்ளவர்கள் தற்போது சிங்கப்பூர் வந்து செல்கின்றனர். மேலும் இந்த சேவை கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வந்தே பாரத் சேவையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் விமான டிக்கெட் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருவதற்கு முன்பைவிட தற்போது 60 முதல் 70 டாலர் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்தியாவில் இருந்து செல்லும் வந்தே பாரத் விமானங்களில் டிக்கெட் விலை கணிசமான அளவு உயர்வு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts