சிங்கப்பூரில் தான் வேலைபார்த்த வீட்டின் முதலாளியிடம் திருடியதுமட்டுமல்லாமல், ஒரு மடிக்கணினியின் மூலம் அது உடையும் வரை அவரது தலையில் பலமுறை அடித்த மயன்மானர் நாட்டை சேர்ந்த பணிப்பெண்ணுக்கு, இன்று திங்கள்கிழமை (மார்ச் 21) ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பெண்களுக்கு பிரம்படி கொடுக்கப்படமாட்டது என்பதால் தற்போது 36 வயதாகும் அந்த மியான்மர் நாட்டவருக்கு, 12 பிரம்பாடிகளுக்கு பதிலாக மேலும் நான்கு மாதங்கள் சிறையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலாளியின் வீட்டில் கொள்ளையடித்த பிறகு, அவர் அந்த குடியிருப்பில் இருந்து சுமார் $37,000க்கும் அதிகமான பணம் மற்றும் பொருட்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பணம் மற்றும் பொருட்களோடு தப்பிய அந்த பெண் பின்னர் தனது சொந்த நாடான மியான்மருக்கு திரும்புவதற்கு விமான டிக்கெட்டை வாங்கியுள்ளார். ஆனால் அவர் தனது விமானத்தில் ஏறுவதற்கு சற்று முன்னதாக போலீசாரை அவரை மடக்கி பிடித்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் தானாக முன்வந்து தனது முதலாளியை கடுமையான முறையில் தாக்கியதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். GAG உத்தரவு காரணமாக அந்த பணிப்பெண்ணின் அடையாளத்தையும் அவருடைய முதலாளியின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை.
கடந்த ஜனவரி 17, 2020 அன்று காலை 10.30 மணியளவில் 61 வயதான அந்த முதலாளி தனது படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது கழுத்தில் ஏதோ ஒரு கூர்மையாக ஆயுதம் இருப்பதை உணர்ந்துள்ளார். அவர் கண்ணை திறந்தபோது தன் பணிப்பெண் கையில் கத்தியோடு தன்னை நோக்கி நிற்பதை கண்டு அதிர்ந்துள்ளார். தன்னிடம் உள்ள பணத்தையும் பொருட்களையும் தராவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்
இதனையடுத்து இரு பெண்களுக்கு இடையில் நடந்த அந்த தள்ளுமுள்ளில் அருகில் இருந்த மடிக்கணினியை எடுத்து அது உடையும் வரை அவரது தலையில் கொடூரமாக அடித்துள்ளார். நிலைகுலைந்த அந்த முதலாலியிடம் இருந்து சாவியை எடுத்து அதன்பிறகு பணம் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்துள்ளார்.