TamilSaaga

“சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்” : மருமகனுக்கு சிறை – அவதூறாக பேசிய மூதாட்டிக்கு “Fine”, என்ன நடந்தது?

சிங்கப்பூரில் தனது அண்டை வீட்டாரின் எட்டு வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மருமகன் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அந்த அண்டை வீட்டாரை அவமதித்தற்காக நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 18) 76 வயது மூதாட்டிக்கு 2,000 வெள்ளி அபராதம் தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயரை அந்த சிறுமியின் அடையாளத்தை பாதுகாக்கும்பொருட்டு நீதிமன்றம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவர் ஓய்வு பெற்றவர் மற்றும் பாதிக்கப்பட்ட 41 வயது பெண் மற்றும் அவரது கணவருக்கு அடுத்த வீட்டில் வசிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த இரு வீட்டார்களும் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல உறவுடன் இருந்துவந்தார்கள் என்றும், மேலும் கடந்த 2018ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவரின் மருமகன் பாதிக்கப்பட்ட அந்த எட்டு வயது சிறுமியை துன்புறுத்திய பிறகு தான் அவர்களின் உறவு மோசமடையத் தொடங்கியது என்று வழக்கறிஞர் கூறினார். இந்த ஆண்டு ஜனவரி 24 அன்று மாலை, பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் பக்கவாட்டில், குற்றம் சாட்டப்பட்டவரின் முற்றத்தை எதிர்கொண்டு வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட அந்த மூதாட்டி 8 வயதே நிரம்பிய அந்த சிறுமியிடம் தகாத வார்த்தைகளை பேசியுள்ளார். 14 அல்லது 15 வயதிலேயே இவளுக்கு மாப்பிள்ளை தேட வேண்டும் என்றும் பல நாக்கூசும் வார்த்தைகளை பேசியுள்ளார். தற்போது நீதிமன்றத்தில் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறான வார்த்தைகளை பிரயோகித்ததற்கு அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஏற்கனவே அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டு மற்றும் அந்த சிறுமிக்கு பாலியல் சம்பத்தப்பட்ட படங்களை காட்டிய அந்த மருமகனுக்கு கடந்த 2019ம் ஆண்டு 4 ஆண்டு சிறை மற்றும் 9 பிரம்படி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts