TamilSaaga

Paralympic | டோக்கியோ பாராலிம்பிக் ; தகுதி பெற்ற 6 சிங்கப்பூர் வீரர்கள்

டோக்கியோ நாட்டில் நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சிங்கப்பூர் வீரர்கள் 6 பேர் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நீச்சல் போட்டியில் உலக அளவில் சாதனை படைத்த இப் பின் க்ஸியுவும் அந்த 6 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல உடற்குறையுள்ளோர் அம்பு எய்தல் போட்டியில் தற்போது உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நூர் ஆலிம்வும் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளார்.

உலக அளவில் பல போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடக்கவிருந்த பாராஒலிம்பிக் போட்டிகளும் ஓர் ஆண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி இந்த பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நகரின் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது. 24 ஆகஸ்ட் 2021ல் தொடங்கி இந்த பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5 2021 ஆண்டு முடிவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related posts