TamilSaaga

சிங்கப்பூரில் ஆசை ஆசையாக நீர்சறுக்கு விளையாடச் சென்ற 50 வயது பெண்… அங்கு நடந்தேறிய சோகம்!

சிங்கப்பூரில் நீர் சறுக்கு பூங்காவிற்கு விளையாட சென்ற ஐம்பது வயது பெண் நீரில் வழுக்கி விழுந்து முதுகு தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சோகம் அரங்கேறியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மக்கள் வார இறுதியில், பொழுதுபோக்கிற்காக நீச்சல் குளங்கள், கடற்கரைகள் மற்றும் பார்க்குகள் ஆகியவற்றிற்கு சென்று நேரத்தை கழிப்பது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் சிங்கப்பூரில் உள்ள பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் வார இறுதி நாட்களில் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

சிங்கப்பூரில் உள்ள பாசீர் ரிஸ் பகுதியில் உள்ள ‘வைல்ட் வைல்ட் வெட்’ எனப்படும் நீர் சறுக்கு பூங்கா உள்ளது. அந்த நீர் சறுக்கில் 50 வயது பெண் ஒருவர் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்திற்குள் வழுக்கி விழுந்துள்ளார். இதனால்,முதுகு தண்டில் கடுமையான வலி அதன் காரணமாக வழி தாங்க முடியாமல் கதறியுள்ளார். எனவே, நீர்ச்சறுக்கு பூங்காவின் உதவியாளர் உடனடியாக மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்துள்ளார்

மருத்துவமனைக்குச் சென்றதும், வலி ஏற்பட்ட பகுதியில் உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் பெண்ணின் முதுகு தண்டு பகுதியில், எலும்பு முறிவு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர் கூறும் பொழுது இது புதிதல்ல என்றும், நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்ததன் மூலம் எலும்பு முறிவு ஏற்பட்டு வாரத்திற்கு ஒரு முறை நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதாகவும் தெரிவித்தார். எனவே, நீச்சல் குளங்கள் போன்ற நீர் சார்ந்த விளையாட்டுகளை விளையாடும் போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts