TamilSaaga

“சிங்கப்பூர் முழுவதும் 20 விரைவு சோதனை மையங்கள்” – ஏன் இதை பயன்படுத்த வேண்டும்? அமைச்சர் விளக்கம்

சிங்கப்பூரில் மக்கள் வழக்கமான செய்துகொள்ளும் பெருந்தொற்று சுய சோதனைக்கு இனி கூடுதலாக, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் QTC (Quick Test Centre) எனப்படும் விரைவான மற்றும் எளிதான சோதனை மையங்களில் கட்டணம் செலுத்தி FET (Fast and Easy Test) எனப்படும் விரைவான மற்றும் எளிய பெருந்தொற்று சோதனைகளை செய்துகொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

சுய-சோதனை கருவிகளுடன் மக்களின் இந்த மையங்களுக்கான அணுகல், சிங்கப்பூரில் கோவிட் -19 சோதனையை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றும் என்று சிங்கப்பூரின் கோவிட் -19 பணிக்குழு நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கமான பரிசோதனை குறித்து பரிசீலிக்க நாங்கள் அனைவரையும் ஊக்குவிக்க விரும்புகிறோம். குறிப்பாக, நீங்கள் அதிக தொற்று ஆபத்துள்ள பொதுநிகழ்வுகளில் பங்கேற்கப் போகிறீர்கள் அல்லது பெரிய அளவிலான நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் வைரஸிலிருந்து விடுபட்டுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இது உதவும் என்று பணிக்குழுவின் இணைத் தலைவர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

QTCகள் முன்பு அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் உள்ள தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டன. அவை டைன்-இன் உணவகங்கள், சிகையலங்கார நிறுவனங்கள், ஸ்பாக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் போன்ற கட்டாயப் பட்டியலிடப்பட்ட இடங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

Related posts