சிங்கப்பூரில் உள்ள அனைத்து 24 சமூக சேவை அலுவலகங்கள் மற்றும் 47 குடும்ப சேவை மையங்களுக்கு சுமார் 1,40,000 ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவை குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் ART கருவிகளை வாங்குவதில் குறைந்த வருமானம் கொண்ட குழுவினரின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என்றும், அவர்களுக்கு தேவைப்படும்போது தாங்களாகவே சுய பரிசோதனையை ஊக்குவிக்கவும் இது உதவும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) தனது Facebook பதிவில் தெரிவித்தார்.
“குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு 1,40,000 ART கிட்கள்” : சிங்கப்பூரின் மகத்தான திட்டத்தில் இதுவும் ஒன்று – எங்கு பெற்றுக்கொள்ளலாம்?
குறைந்த வருமானம் கொண்ட ஒவ்வொரு குடியிருப்பாளரும் ஐந்து ART கருவிகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதுகுறித்த உதவிக்காக உரிய அலுவலகங்கள் மற்றும் மையங்களை அவர்கள் அணுகலாம். கடந்த அக்டோபர் மாதம் முதல் சமூக சேவை அலுவலகங்களின் கீழ் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இந்த கருவிகளை வழங்க சுகாதார அமைச்சகம் மற்றும் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து செயல்பட்டு வருவதாக திரு ஓங் கூறினார்.
இந்த கிட் வழங்கும் நிகழ்ச்சி குறித்து தனது முகநூல் பதிவில் தெரிவித்த சுகாதார அமைச்சர், 81 வயதான திரு யியாங் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்களில் ஒருவர் என்று கூறினார். திரு. யியாங் என்பவர், ஆங் மோ கியோவில் உள்ள ஒரு சமூக சேவை அலுவலகத்தின் அதிகாரி ஆவர். சமூக சேவை அதிகாரியாக மக்களை அதிகம் சந்திக்கும் ஒரு மனிதரான யியாங் வீட்டில் வெறும் 1 ART கிட் தான் இருந்தது என்று அமைச்சர் கூறினார். ஆகையால் இவர் போன்ற அதிகாரிகளுக்கு கூடுதல் கிட்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த ART கிட் மூலம் குறைந்த சம்பளம் கொண்ட குடும்பத்தினரும் தங்களுக்கு உடல் நலம் குறையும்போது தேவைப்படும் பட்சத்தில் கிட்களை பயன்படுத்தி சோதித்துக்கொள்ளலாம்.