TamilSaaga
Singapore Naam Tamilar Katchi

சிங்கப்பூரில் “நாம் தமிழர் கட்சி செயல்பாடுகளில்” ஈடுபட்ட தமிழ் ஊழியர் – ஆயுள் முழுக்க சிங்கப்பூர் நுழைய தடை

சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (25) என்ற இளைஞரை நாட்டை விட்டு வெளியேற்றியது சிங்கப்பூர் அரசு.

அதுமட்டுமின்றி, குமார் ஆயுள் முழுவதும் சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக வீட்டு வேலை” : ஓய்வின்றி உழைத்த தொழிலாளி ரூபி – மெய்யானது அவருடைய கனவு

இதுகுறித்து நமது Tamil Saaga சார்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் உதவியாளர் செந்திலிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் பேசுகையில், “அந்த ஒரேயொரு ட்வீட் தவிர, இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. முதலில் சிங்கப்பூரில் நாம் தமிழர் அமைப்பே கிடையாது. அப்படியிருக்கும் போது, எப்படி ஒருவர் அங்கே கட்சிப் பணிகளில் ஈடுபட்டார் என்று கூறுகிறார்கள் என புரியவில்லை. எங்களுக்கே இன்னமும் இதுகுறித்த முழுமையான தகவல் கிடைக்கவில்லை. குமார் என்று சொல்லப்படும் அந்த இளைஞரின் புகைப்படமோ, அவரைப் பற்றிய வேறு எந்த தகவலோ கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts