TamilSaaga

கூரையை பிச்சிக்கிட்டு சிங்கப்பூர் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்… வாங்கிய குலுக்கல் சீட்டுக்கு 13 மில்லியன் டாலர் பரிசு!

அதிர்ஷ்டம் வரும் போது கூரையை பிரித்துக் கொண்டு வரும் என்று சொல்வார்கள். அதே போன்று சம்பவம் தான் சிங்கப்பூரில் நடந்திருக்கின்றது.அக்டோபர் இரண்டாம் தேதி ஆன நேற்று நடைபெற்ற டோட்டோ குழுக்களில் ஒரே நபர் 13 மில்லியன் மதிப்புள்ள பரிசினை தட்டிச் சென்றுள்ளார். சிங்கப்பூர் வரலாற்றில் ஒரே குலுக்கள் சீட்டில் இவ்வளவு பெரிய தொகை வென்றிருப்பது இதுவே முதல்முறை என்று தெரியவந்துள்ளது.

பெரர் பார்க் எம் ஆர் டி அருகில் உள்ள கடையில் வெறும் 28 டாலர் கொடுத்து டிக்கெட் வாங்கிய அவருக்கு தான் இந்த அதிர்ஷ்ட காற்று அடித்திருக்கின்றது. அதேபோன்று இரண்டாம் பரிசாக குலுக்கலில் விழுந்த 62991 டாலர் மதிப்புள்ள பரிசு தொகையை 25 பேர் பகிர்ந்து கொண்டனர். திங்கட்கிழமைக்கு முந்தைய 3 தேதிகளில் எவரும் பரிசினை தட்டி செல்லாததால் ஒரு நபருக்கு 13 மில்லியன் மதிப்புள்ள பரிசுகள்தரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

திங்கட்கிழமை அன்று ஏராளமானோர் குலுக்கள் சீட்டு வாங்க கடைகளில் முன் குவிந்ததால் எல்லா கடைகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts