TamilSaaga

இந்தியர் மீது இனவெறி கமெண்ட் அடித்த புரொபசரின் சல்லாப லீலை… தூக்கி உள்ளே போட தயாராகும் சிங்கப்பூர் அரசாங்கம்.. வைரலாகும் பின்னணி…

சிங்கப்பூரின் பூங்காவில் காதல் ஜோடியிடம் இனவெறியுடன் பேசிய பாலிடெக்னிக் புரொபசர் மீண்டும் இன்னொரு சர்ச்சையில் சிக்கி கைதாகி இருக்கிறார். இச்சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

Ngee ann பாலிடெக்னிக் கல்லூரியில் புரொபசராக இருந்தவர் டான் பூன் லீ. இவர் கடந்த வருடம் Orchard Roadல் அமைந்திருக்கும் Angullia Parkல் டேவ் பர்காஷ் மற்றும் அவர் காதலி ஜாக்குலினை காண்கிறார். இதில் பர்காஷ் பாதி இந்தியர், பாதி ஃபிலிப்பினோ இனத்தை சேர்ந்தவர். ஜாக்குலினோ சீனா மற்றும் தாய் இனத்தை சேர்ந்தவர். அந்த பார்க்கிலேயே இருவரிடமும் சண்டைக்கு சென்றாராம் டான்.

இவர்களின் சண்டையை ஜாக்குலின் வீடியோ எடுத்திருந்தார். அதை பர்காஷ் தனது பேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், டான் இது எவ்வளோ பெரிய கேவலம் தெரியுமா? ஒரு இந்தியருடன் சீன பெண் இருப்பதாக எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல், நீங்கள் உங்க சொந்த இனத்தை பெருமையாக நினைத்தால் ஒரு இந்திய பெண்ணை தானே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த வீடியோ அப்போதே வைரலானது. இதை தொடர்ந்து பேஸ்புக் மூலம் தனது நடத்தைக்கு வருத்தம் தெரிவித்து இருந்தார்.

அவர் மீது வழக்கு போடப்பட்டு விசாரனை நடத்தப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அவரின் புரொபசர் வேலையும் கல்லூரி நிர்வாகத்தால் பறிக்கப்பட்டது. இந்நிலையில் டான் மீது இன்னொரு வழக்கு தற்போது போடப்பட்டு இருக்கிறது. அதாவது அவரின் தொலைபேசியில் 64 ஆபாச படங்கள் இருப்பதை காவல்துறை கண்டறிந்து இருக்கிறது. இது அவர் தனிப்பட்ட இச்சைக்காக ஆன்லைனில் இருந்து தரவிறக்கம் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இனவெறி வழக்குடன் தற்போது இதுவும் இணைந்து இருக்கிறது. இதுகுறித்து துணை அரசு வழக்கறிஞர் நான்கு வாரம் டானுக்கு சிறை தண்டனை கொடுக்க வேண்டும். இது அந்த ஜோடி மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை. மொத்த இந்திய இனத்தின் மீது இது தாக்குதலாகி இருக்கிறது.

இதை தொடர்ந்து பேசிய டானின் வழக்கறிஞர், இந்த பிரச்சனையால் டான் ஏற்கனவே தனது வேலையை இழந்து விட்டார். தனது தவறினை ஒப்புக்கொண்டிருக்கும் டானின் 25 வயது மகளும் முன்னாடி வேறு இன ஆண் ஒருவருடன் டேட்டிங்கில் இருந்தார். அது டானின் மனதினை வெகுவாக பாதித்தது. புரொபசராக இருந்த டான் தற்போது மன நல சிகிச்சையில் இருக்கிறார். இவருக்கு வரும் டிசம்பர் 29ந் தேதி தண்டனை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதம் அல்லது இன உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஆபாசமான படங்களை வைத்திருப்பவர்களுக்கு $40,000 வரை அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts