TamilSaaga

சிங்கப்பூரில் லாரி மீது பைக் மோதியதில் 27 வயது இளைஞர் பரிதாபமாக பலி!

சிங்கப்பூரில் பேருந்து, பைக் ஆகியவை மோதிக்கொண்டதில் 27 வயதுடைய இளைஞர் உயிர் இழந்துள்ள சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. சென்ற பேருந்தானது பிரேக் போட்டு திடீரென்று நிறுத்தப்பட்டதன் காரணமாக பின்னால் வந்த லாரி ஓட்டுனரும் வாகனத்தை உடனடியாக நிறுத்தியதால் அதற்கு பின்னால் பைக்கில் வந்த இளைஞர் லாரியின் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது என விபத்தை நேரில் கண்ட நபர்கள் கூறினர். இச்சம்பவம் ஆனது மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள சாலையில் புதன்கிழமை 11 மணி அளவில் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

லாரியில் மோதியதும் பைக்கில் சென்ற இளைஞர் சுயநினைவின்றி கீழே விழுந்த காரணத்தினால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் என அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் விபத்தின் காரணமாக பேருந்தில் பயணித்த 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். எனினும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related posts