TamilSaaga

இசை நிகழ்ச்சிக்காக லிட்டில் இந்தியாவிற்கு வருகை தந்த யுவன் சங்கர் ராஜா….. குஷியாக செல்ஃபி எடுத்துக் கொண்ட சிங்கப்பூர் தமிழர்கள்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற புதன்கிழமை அன்று நடைபெற இருப்பதால் யுவன் சங்கர் ராஜா நேற்று சிங்கப்பூருக்கு வந்தார். அப்பொழுது லிட்டில் இந்தியாவில் இருக்கும் இஸ்தாரா என்னும் நகைக்கடைக்கு அவர் வருகை தந்தார். அப்பொழுது அவரைக் கண்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

சிங்கப்பூரின் மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ் மற்றும் இஸ்தாரா ஜுவல்லரி இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் ‘ஹாய் ஒன் யுவன்’ என்னும் இசை நிகழ்ச்சியை காண சிங்கப்பூர் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நியாயமான கட்டணத்தில் தரமான இசை நிகழ்ச்சியை வணங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான பார்த்திபன் முருகையன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், இந்நிறுவனம் instagram வழியாக நடத்திய போட்டியில் வென்றவர்களுக்கு நிகழ்ச்சியை காண்பதற்கான இலவச நினைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இதற்கு முன் யுவன் சங்கர் ராஜா கனடா, பாரீஸ் ஜெர்மன் பல்வேறு நாடுகளில் நடத்திய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து இந்நிகழ்ச்சி வெற்றி காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இவருடன் பல்வேறு பிரபலமான பாடகர்கள் இணைவதால் மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Related posts