TamilSaaga

காபூலில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் நாட்டு மீட்பு விமானம் – 21 இந்தியர்கள் பாத்திரமாக மீட்பு

கடந்த செவ்வாய்க்கிழமை காபூலில் இருந்து புறப்பட்ட பிரான்சின் முதல் மீட்பு விமானத்தில் 21 இந்தியர்கள் இருந்தனர் என்று இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனின் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஒரு ட்வீட்டில் தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில் “காபூலில் இருந்து நேற்று முதல் பிரெஞ்சு மீட்பு விமானத்தில் 21 இந்தியர்கள் இருந்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த சில வருடங்களாக அமெரிக்க படைகள் திரும்பப் பெற்று வரப்படும் நிலையில் தலிபான் தங்களது ஆதிக்கத்தை ஆப்கானிஸ்தான் நாட்டில் பெரிய அளவில் செலுத்தி வந்தனர். பெரிய அளவில் தாக்குதல்களையும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் நடத்தி வந்த நிலையில் தற்பொழுது அந்த நாட்டின் பெரும்பாலான மாகாணங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தலிபான்கள் அண்மையில் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய தலைநகரமும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமான கந்தகாரையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதனையடுத்து தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் தொடர்ந்து முன்னேறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடைய இந்த முன்னேற்றத்தை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்கமுடியவில்லை என்று தகவல்கள் வெளியானது.

மேலும் காபூல் நகரில் தற்பொழுது தாலிபன்கள் நுழைந்துள்ள நிலையில் அவர்கள் சண்டையிட விரும்பவில்லை என்றும், சமாதான முறையில் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாகவும் தலிபான் அமைப்பு தகவல் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலையும் கைப்பற்றி நாட்டின் அதிகாரத்தை தலிபான் கைப்பற்றியுள்ளது.

Related posts