TamilSaaga

பற்றியெரிந்த வீடு.. துணிந்து சென்று மூதாட்டியை காத்த மூன்று பேர் – விருது வழங்கிய அமைச்சர்

சிங்கப்பூரில் சில தினங்களுக்கு முன்பு யீஷுன் ரிங் ரோட்டில் உள்ள பிளாக் 141 ஏற்பட்ட தீவிபத்தில் அந்த வீட்டிற்குள் இருந்த மூதாட்டியை காப்பாற்றிய அண்டைவீட்டார் 3 பேருக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

அவர்கள் மூன்று பேருக்கும் “உடனடி உதவி வழங்குவதற்கான சமூக விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. குமாரி ரங்கநாதன் முத்துலட்சுமி, திரு சோ ஷாவ், திரு பாஸ்கரன் சபரிஷ் ஆகியோருக்கு சட்ட உள்துறை அமைச்சர் ஷண்முகம் இந்த விருதினை வழங்கி கௌரவித்தார்.

குமாரி முத்துலட்சுமி தீப்பற்றி வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இல்ல பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீட்டிலிருந்த 89 வயது மூதாட்டியை காப்பாற்ற அவர் எரிந்து கொண்டிருந்த வீட்டிற்கு விரைந்து சென்று இருக்கிறார்.

சோ மற்றும் திரு பாஸ்கரன் வீட்டிற்குள் சென்று அவர்கள் உதவி செய்யும் மனப்பான்மை தற்காப்பு படையினர் அங்கீகரித்து இந்த விருதினை வழங்கி உள்ளனர்

Related posts