TamilSaaga

Work Permit-ல் புதிதாக வேலைக்கு வருபவர்கள் கவனத்திற்கு.. Onboard Centre-ல் புக் செய்யாமல் சிங்கப்பூர் வர வேண்டாம்.. மீறினால் விமான கட்டணம் காலி.. சாங்கி ஏர்போர்ட்டில் இருந்து #Exclusive Report

இதுநாள் வரை சிங்கப்பூரில் வேலைக்கு வர VTL, Entry Approval போன்றவை இருந்தன. ஆனால், கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் சிங்கையில் Construction, Marine Shipyard மற்றும் Process Sector-ல் வேலைக்கு வர Work Permit-ல் விண்ணப்பித்திருப்பவர்கள் கட்டாயம் Onboard Centre-ல் தங்க வேண்டும் என மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, இந்த துறைகளில் பணியாற்ற சிங்கப்பூர் வரும் Work Permit Holder-ஸ் Onboard Centre-ல் 3 – 4 நாட்கள் கட்டாயம் தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சிங்கப்பூரில் தற்போது நிலவும் தொற்றின் நிலைமை, அவற்றை கையாளும் சூழல், தொற்று குறித்த அரசின் சமீபத்திய நெறிமுறைகள் போன்றவை கற்பிக்கப்படுகிறது.

எனினும், இது முதன் முறையாக விசா பெற்று புது IPA (in-principle approval) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள், மீண்டும் சிங்கப்பூரில் வேலைக்கு வரும் போது, Onboard Centre செல்ல தேவையில்லை. ஆனால், முதன் முறையாக சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இது தெரியாமல் பல ஊழியர்கள் விசா வந்த உடனேயே டிக்கெட் போட்டு விடுகின்றனர். இதனால், ஏகப்பட்ட சிக்கல்களும், மன உளைச்சல்களும் தான் மிஞ்சுகிறது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், நீங்கள் S-pass, E-pass அல்லாது Work Permit-ல் முதன் முறையாக சிங்கப்பூர் செல்ல இருக்கிறீர்கள் என்றால், சிங்கையில் நீங்கள் வேலைக்கு செல்லவிருக்கும் நிறுவனம் நீங்கள் Onboard Centre-ல் தங்க முன்பதிவு செய்ய வேண்டும். இது உறுதி செய்யப்பட்ட பிறகு தான், நீங்கள் விமான டிக்கெட்டையே புக் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு “புதிய பாஸ்”.. Apply செய்த உடனே Approval – மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Onboard Centre-ல் தங்க புக்கிங் செய்யவில்லை எனில், நீங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதி கிடையாது. ஏனெனில், சிலர் Onboard Centre-க்கு முன்பதிவு செய்யாமல், சிங்கப்பூர் சென்று இறங்கிய பிறகு பார்த்தால், அந்த குறிப்பிட்ட தினத்தில் Onboard Centre-ல் Slot முழுவதும் நிரம்பியிருக்கும். அதாவது, அங்கு ஊழியர்கள் முழுமையான அளவு ஏற்கனவே தங்கியிருப்பார்கள். எனவே, அன்றைய தினம் புதிதாக சென்றவர்களுக்கு அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காது. இதனால், சில ஊழியர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

எனவே, விமான டிக்கெட் புக் செய்வதற்கு முன்பாக, இந்த Onboard Centre-ல் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

எனினும், இதில் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், S-pass அல்லது Employment Pass-ல் புது IPA பெற்றவர்கள்.. அதாவது முதன் முறையாக விசா பெற்றவர்கள் Onboard Centre-ல் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இது முழுக்க முழுக்க Work Permit-ல் புது IPA பெற்று சிங்கப்பூர் வருபவர்கள் மட்டுமே அங்கு தங்க புக்கிங் செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, விமான டிக்கெட்டை பொறுத்தவரை Refundable, Non – Refundable என்று இரண்டு விதம் உண்டு. இதில், நீங்கள் Onboard Centre-க்கும் முன்பதிவு செய்யாமல், Non – Refundable-ல் விமான டிக்கெட் புக் செய்துவிட்டால், மீண்டும் கேன்சல் செய்யவும் முடியாது. அப்படியே செய்தாலும் பணம் திரும்ப கிடைக்காது.

எனவே தயவு செய்து, Work Permit-ல் புது IPA பெற்று சிங்கப்பூர் வர இருப்பவர்கள், Onboard Centre-ல் முதலில் முன்பதிவு செய்துவிட்டு விமான டிக்கெட் புக் செய்வதே சாலச் சிறந்தது.

News Source

விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts