TamilSaaga

“நாம ஒண்ணா இருந்த வீடியோக்களை வெளியிடுவேன்” : சிங்கப்பூரில் இளைஞரை மிரட்டிய 38 வயது பெண் – ஐந்து ஆண்டு சிறைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் ஒரு ஆணின் அந்தரங்கப் படங்கள் மற்றும் வீடியோவை அவரது தாய் மற்றும் தோழிக்கு வெளியிடுவேன் என்று கூறிய மிரட்டிய பெண் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 32 வயதுள்ள அந்த ஆணின் அந்தரங்க புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை வெளியிடுவது குறித்து மிரட்டல் விடுத்த அந்த 38 வயது பெண் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையும் படியுங்கள் : இந்தியா : தனிமைப்படுத்துதல் தேவையில்லை

இந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நள்ளிரவு 12.25 மணியளவில் குறிப்பிட்ட அந்த நபருக்கு Whatsapp செய்தியை அனுப்பியதன் மூலம் அந்த பெண் அவ்வாறு செய்ததாகக் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றது. அனுப்பட்ட அந்த Whatsapp செய்தியில் : “பொய் சொல்வதையும் என்னோடு விளையாடும் உங்களின் தந்திர விளையாட்டுகளை நிறுத்திக்கொள்ளுங்கள். நான் உங்கள் காதலி மற்றும் உங்கள் அம்மாவிடம் நாம் எடுத்துக்கொண்ட படங்கள் மற்றும் வீடியோ அனைத்தையும் காட்டுவேன், என்று அந்த செய்தியில் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) பாதிக்கப்பட்டவரை அடையாளம் காணக்கூடிய எந்த தகவலையும் வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளது. மிரட்டல் விடுத்த ஒரு குற்றச்சாட்டுடன் கோவிட் தொடர்பான மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்வர் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வழக்கு வரும் ஜனவரி 2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, தெரிந்தே அந்த நபரின் அந்தரங்கப் படங்கள் மற்றும் பதிவுகளை விநியோகிப்பேன் என்று மிரட்டியதாக சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். குற்றம்சாட்டப்பட்டவர் பெண் என்பதால் அவருக்கு பிரம்படி வழங்கமுடியாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts