TamilSaaga

நாயை சித்ரவதை செய்த இளைஞர் – இளைஞரை தடுக்காமல் வீடியோ எடுத்தவருக்கு அபராதம்

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர், பூடுல் வகை நாய் ஒன்றை அவரது சொந்தக்காரர் (கிளெமென்ட்) ஒருவர் கொடுமைப்படுத்திய நிலையில், அந்த செயலை தடுக்காமல் படமெடுத்துள்ளார். இந்நிலையில் அந்த ஆண்டவருக்கு 4500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தனது குற்றத்தை Chia Yong-Quan ஒப்புக்கொண்டார்.

அக்டோபர் 2016 மற்றும் நவம்பர் 2016 க்கு இடையில், கிளெமென்ட் தனது நாயை சித்திரவதை செய்யத் தொடங்கியபோது யோங்-குவான் கிளெமெண்டின் பிளாட்டில் இருந்துள்ளார். லெஸ்லி என்று அழைக்கப்படும் அந்த பழுப்பு நிற நாயை கிளெமென்ட் வைத்திருந்தார். இந்த நிகழ்வு நடந்தபோது அந்த நாயின் வயது நான்கு.

பல முறை கிளமென்ட் அந்த பூடுல் வகை நாயை சித்தரவதை செய்துள்ளார். அதன் வாயை கம்பியால் கட்டி பிளாஸ்டிக் hanger கொண்டு அடித்துள்ளார். அதன் முன்னங்கால்களை கட்டி அந்தரத்தில் அதை தூக்கி நிறுத்தாமல் பல முறை அந்த உடம்பில் அந்த பிளாஸ்டிக் Hanger கொண்டு அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

ஆனால் இதை பார்த்துக்கொண்டிருந்த யோங்-குவான் தனது சொந்தக்காரரை தடுக்க முற்படவில்லை, மாறாக அந்த நாயை கிளமெண்ட் சித்தரவதை செய்வதை விடியோவாக எடுத்துள்ளார். தற்போது அவர்களுடைய குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் முறையே 4500 மற்றும் 6000 சிங்கப்பூர் வெள்ளி அபராதமும், அடுத்த ஓராண்டிற்கு அவர்கள் எந்த செல்லப்பிராணிகளை வளர்க்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts