TamilSaaga

சிங்கப்பூர் துவாஸ் துறைமுகம் திறப்பு – கப்பல்கள் வந்து செல்ல அனுமதி

சிங்கப்பூரில் கடல்துறை மையம் என்ற அங்கீகாரத்தை நிலைநாட்டும் வகையில் துவாஸ் துறைமுகத்தின் இரண்டு அணை கரைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமானது சிங்கப்பூருக்கு கப்பல்கள் வருவதற்கும் அல்லது இங்கிருந்து செல்வதற்கும் பயன்படும் என்று மாற்றப்பட்ட குடிநுழைவு சட்டத்தின் அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

இந்த துறைமுகத்துக்கு தேவையான மேம்பட்ட கருவிகள் அனைத்தும் வந்தடைந்து விட்டதாகவும் மேலும் உள்கட்டமைப்பு வேலைகள் அனைத்தும் சுமூகமாக நடந்து வருகிறது என்றும் சிங்கப்பூரின் BSA தகவல் தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த துறைமுகத்தின் செலவானது இருபது பில்லியனுக்கும் அதிகம் என கூறப்படுகிறது.

Related posts