TamilSaaga

உணவங்காடி நிலைய கடைக்காரர்களுக்கு ஆதரவு – பட்டியலிட்ட துணையமைச்சர் டாக்டர் ஏமி கோர்

சிங்கப்பூரில் உணவங்காடி நிலையங்களில் கடை வைத்திருப்பவர்களுக்கு இந்த பெருந்தொற்று பரவும் சூழலில் கொடுக்கப்பட்டு வரும் ஆதரவு குறித்து நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் எமி கோர் விவரித்துள்ளார்.

சென்ற ஆண்டு ஏப்ரலில் இருந்து மொத்தம் 7 மாத வாடகை பணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் வரை 12 மாதங்களுக்கு வாடகை அதிகரிப்பு என்பது நிறுத்தப்பட்டுள்ளது.

மேசைகள் சுத்தம் செய்யும் மேலும் தட்டுகளை கழுவும் சேவைகளுக்கான கட்டணத்தில் 5 மாத சலுகை வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை உணவு விநியோக சேவைகளுக்கான செலவைக் குறைக்க கடைக்காரர்களுக்கு ஒருமுறை 500 வெள்ளி வரை நிதி உதவி.

சுயதொழில் செய்பவர்களுக்கான 9000 வெள்ளி நிதி உதவி, கொரோனா மானியத்தின் மீது ஒரு முறை 500 வெள்ளி நிதி உதவி அல்லது மூன்று மாதங்கள் வரை மாதத்திற்கு 500 வெள்ளி வரை நிதிஉதவி என்று பல உதவிகள் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் எழுப்பிய கேள்விக்கு எமி கார் பதிலளித்தார்.

Related posts