TamilSaaga

இன்று (அக்.27) மாலை TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு “6 கோடி” – லாட்டரி வாங்கிட்டீங்களா?

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் இன்று (அக்.27) நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு இதற்கான குலுக்கல் நடைபெறுகிறது.

இதில், முதல் பரிசாக $1,000,000 சிங்கப்பூர் டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ஐந்தே முக்கால் கோடிக்கும் மேல்.

எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மேலும் படிக்க – தாயின் மரணப் படுக்கை… விமான டிக்கெட் கிடைக்காமல் சாங்கி MRT ஸ்டேஷனில் அழுது கொண்டிருந்த நபர் – கடைசி வரை கூட இருந்து உதவிய இரு தமிழக ஊழியர்கள்

முன்னதாக, TOTO லாட்டரியில் கடந்த அக்.15 அன்று நடைபெற்ற இந்த வாரத்துக்கான முதல் குலுக்கலில் முதல் பரிசான $2,824,881 சிங்கப்பூர் டாலர்கள் தொகையை ஒருவர் வென்றார். இது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 16 கோடி ரூபாய்.

இந்நிலையில், இன்று மீண்டும் குலுக்கல் நடைபெறவுள்ளது. லாட்டரி என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் சார்ந்தது மட்டுமே. எனவே, லாட்டரி சீட்டு வாங்குவதையே வாடிக்கையாக வைத்திருக்காமல் உழைப்பில் கவனம் செலுத்தும்படி வேண்டுகிறோம். மாதத்திற்கு 1 லாட்டரி சீட்டு என்பதே போதுமானது. வாராவாரம் வாங்குவது என்பது உங்கள் பணத்தை தான் வீணடிக்குமே தவிர, வேறு எந்த பயனும் இல்லை.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts