TamilSaaga

சிங்கப்பூர் பிடிஓ வீடுகள் பணி மீண்டும் துவக்கம் – விரைவில் சாவி வழங்கப்படும்

சிங்கப்பூரில் வசதிக்கேற்ப வீடு கட்டித்தரும் அமைப்பான வீடமைப்பு திட்டங்களின் கட்டுமானப்பணி அடுத்த மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புக்­கிட் பாத்­தோக், கிள­மெண்டி, புக்­கிட் பாஞ்­சாங், உட்­லண்ட்ஸ் போன்ற பகுதிகளின் கட்டுமானப்பணிகளுக்கான முக்கிய ஒப்பந்ததாரர் கிரேட் எர்த் கட்டுமான பணி நிறுவனமானது வீழ்ச்சியை சந்தித்ததால் தாமதமான பணிகள் துவங்க இருக்கிறது.

தற்போதது இந்த பணிகள் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதத்தில் நிறைவடையலாம் என கூறப்படுகிறது. 2022ம் ஆண்டின் முதல் காலாண்டு முதல் 2023ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு நேரத்தில் சுமார் 3000 வாடிக்கையாளர்கள் சாவியை பெற்றுக்கொள்ளலாம்.

நியு­கொன் பில்­டர்ஸ், சிஇ­எஸ் இஞ்­சினி­ய­ரிங்,வெல்­டேக் கன்ஸ்ட்­ரக்­‌ஷன், டீம்­பில்ட் இஞ்­சி­னி­ய­ரிங் போன்ற நான்கு குத்தகைதாரர்கள் தற்போது செப்டம்பர் 28 முதல் கட்டுமானப்பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

எனவே இந்த கட்டுமானப்பணிகள் அடுத்த மாதம் முதல் துவங்கி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts