TamilSaaga

“சிங்கப்பூரில் அமலுக்கு வந்த தளர்வு” – என்னென்ன நடவடிக்கைகளுக்கு அனுமதி? – முழு விவரம்

சிங்கப்பூரில் இன்று ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நாட்டில் அமலில் இருக்கும் பல கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இன்று 10ம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் ஐந்து பேர் வரை சமூக ஒன்று கூடலில் கலந்து கொள்ளலாம். முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இரண்டு பேர் வரை ஒன்று கூடலாம்.

மேலும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் உணவகங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் ஐந்து பேர் வரை ஒன்றாக கூடி உணவு உண்ணலாம் என்று தெரிவித்துள்ளது. இன்று ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் உணவகங்களுக்கு செல்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன் எடுத்த பெருந்தொற்று நெகடிவ் சான்றிதழை அளித்தால் அவர்களும் உணவகங்களில் உணவு உண்ண அனுமதி அளிக்கப்படும்.

மேலும் பெரிய சமூக ஒன்றுகூடல்களில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் 500 பேர் வரை ஒன்றுகூடலாம் என்றும். தடுப்பூசி போடாதவர்கள் 50 பேர் வரை ஒன்றுகூடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதிக்கு பிறகு தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட 1000 பேர் வரை கூடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 250 பேர் வரை கூடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையிடங்களில் தேவைப்படும் பட்சத்தில் வீட்டில் இருந்து பணிசெய்யும் 50 சதவிகிதம் பணியாளர்கள் அலுவலகத்திற்கு திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையங்களில் 5 பேர் குழுவாக செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேக்கர் மையங்களில் இருவர் ஒன்றாக செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

Related posts