சிங்கப்பூரில் இருந்து மலேசியா-வுக்கு தினம் தோறும் பேருந்து வழியா பல மக்கள் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். சிலர் வேலை காரணமாக அல்லது அன்டை நாட்டை சுற்றிப்பார்க்க என பல விதமான காரணங்களுக்காக நாடு விட்டு நாடு தினம்தோறும் பயணம் மேற்கொள்கின்றனர்.
பொதுவாக நாடு விட்டு நாடு செல்லும் பொழுது தேவையான முக்கிய ஆவணம் பாஸ்போர்ட். சில நாடுகள் விசா தளர்வுகளை அறிவித்திருந்தாலும், பாஸ்போர்ட் என்பது எல்லா இடங்களிலும் காட்டாயம்.
அதே போலத்தான் சிங்கப்பூரில் இருந்து பஸ் மூலமாக மலேசியா பயணிக்கும் அனைவருக்கும் பாஸ்போர்ட் சரிபார்க்கப்படும். சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு இரண்டு வழித்தடங்கள் மூலம் பேருந்துப் பயணம் செல்லலாம். ஒன்று Woodland மற்றொன்று Tuas. இந்த இரண்டு இடங்களிலும் சோகனைச்சாவடிகள் இருக்கும் அங்கு பாஸ்போர்ட்-ஐ சரிபார்க்கத்தான் மிகப்பெரிய அளவில் வரிசை கட்டி நிற்பார்கள். அதுவும் Weekend சமயத்தில் சொல்லவே வேண்டாம். இரண்டு நாடுகளுக்கும் பொதுவான சோதனைச்சாவடி என்பதால் சிங்கப்பூர் மற்றும் மலேசியா என இரு நாடுகளைச் சார்ந்த அதிகாரிகளிடமும் பாஸ்போர்ட்-ஐ சரிபார்க்க வேண்டும். இதனால் மணிக்கணக்கில் அங்கு வரிசை நீண்டிருக்கும்.
இது அனைத்திற்கும் தற்பொழுது ஒரு தீர்வை ICA (Immigration Checking Authority) அறிவித்துள்ளது. இதன்மூலம் பாஸ்போர்ட் இல்லாமல் QR-code மூலம் எளிதாக அடையாளத்தை சரிபார்க்கும்படி இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சோதனை நவம்பர் 21 முதல் டிசம்பர் 1 வரை நடத்தப்பட்டது இதில் 48,000 பேருக்கு மேல் இந்த QR-code மூலம் தங்கள் அடையாளத்தை சரிபார்த்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இது மிகவும் எளிதாகவும் உதவியாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.
யாருக்கெல்லாம் பயன்?
தினம்தோறும்வந்து செல்லும் கூட்டத்தில் அதிக நேரம் Immigration Clearance-க்காக காத்திருக்க வேண்டியிருக்கும். அதுவும் விழாக்காலங்கள், weekend போன்ற நாட்களில் ஒரு நாள் சுற்றுலாவுக்காக வந்து செல்பவர்கள் இன்னும் ஏராளம். அப்பொழுது மணிக்கணக்கில் சோதனைச்சாவடியில் காத்திருக்க வேண்டும். இதில் குழந்தைகள் வயதானவர்கள், வீல் சேர்-ல் பயணிக்கக்கூடியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர். இதைத் தவிர்க்கத்தான் இந்த முயற்சி.
எப்படிப் பயன்படுத்தலாம்?
MyICA செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் விவரங்களை பதிவிட வேண்டும். அதில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்களுக்கான QR Code உருவாகும். அதனைப் பயன்படுத்தி சோதனைச் சாவடியில் ஸ்கேன் செய்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம்.
மேலும் ICA-வின் வழிகாட்டுதலின் படி, அனைவரும் ஆப் மூலம் தங்கள் QR-Code ஐ ஸ்கேன் செய்யவும், Screen Shot, print போன்றவற்றை தவிர்க்கவும் வலியுறுத்தப்படுகிறது. ஒரே ஆப்-ல் தனிநபராகவும் அல்லது குடும்பத்தினருக்கும் QR-code பயன்படுத்த முடியும்.
எப்பொழுது துவங்கும்?
இந்த வசதி நவம்பர் மாத இறுதியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவெற்றியடைந்த நிலையில் வருகிற டிசம்பர் 16 முதல் Tuas சோதனைச் சாவடியில் நடைமுறைக்கு வரவுள்ளது.
மேலும் வருகின்ற ஜனவரி 2025-ல் இருந்து Woodland-லும் நடைமுறைப்படுத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
சிங்கப்பூர்-ல் வாழும் பல மக்கள் இதனைப் பயன்படுத்த முடியும், Singapore citizens, permanent residents and long-term pass holders போன்றவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.
முக்கியக் குறிப்பு இந்த வசதி சோதனைக்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்கத்தான் சிங்கப்பூர் அரசாங்கத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வழக்கம்போல் தங்கள் பாஸ்போர்ட்-ஐ வைத்திருப்பது முக்கியம். ஒருவேளை தேவைப்படும் பட்சத்தில் அதனைக் காண்பிக்க வேண்டும். மேலும் அவர்கள் பயணம் மேற்கொள்ளும் நாட்டில் தேவைப்படும் இடங்களில் பாஸ்போர்ட்-ஐ வைத்து தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
அண்டை நாடுகளுக்கு உங்க ஒரு நாள் சுற்றுலாவுக்கு இந்தத் தகவலை மறக்காதீங்க! உங்க குடும்பம் மற்றும் நண்பர்களுக்குமிந்த தகவலை ஷேர் செய்திடுங்க.
Woodlands வழியா மலேசியாவுக்கு ஒரு நாள் சுற்றுலாபோகணுமா? நம்ம தமிழ் சாகா பக்கத்தில் அதற்கான ஒரு ட்ரிப் பிளான் இருக்கு! படிக்க இங்கே கிளிக் செய்யவும்.