TamilSaaga

பட்டுக்கோட்டை ருத்ர சித்தரை.. ஒட்டுத்துணியில்லாமல் ஓடவிட்ட சிங்கப்பூர் ‘ஹல்க்’ சாமியார் – நம்பி சிங்கப்பூர் வந்து ஒரேநாளில் மோசம் போன பரிதாபம்!

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர மக்கள் மத்தியில் ருத்ர சித்தராக வலம் வந்து அருள் வாக்கு சொல்லி வந்த சாமியார் ஒருவர் சிங்கப்பூர் ஹல்க் சாமியாரிடம் அடிவாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

பெண்களின் நோயை கட்டையால் குத்தியே குணப்படுத்துகிறார் என்ற டேக்லைனோடு பட்டுக்கோட்டை முழுவதும் பிரபலமாக வலம் வந்தவர் ருத்ர சித்தர் ராஜ்குமார்.

அவர் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து, அவரது கால் பாதம் கூட தரையில் படாமலிருக்க மலர்த்தூவி அவரை கடவுளுக்கு நிகராக வைத்து பக்தர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில், கடந்த செப்.11ம் தேதி, சிங்கப்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர், தனது சகோதரருக்கு உடல் நலக்குறைவு உள்ளதாகவும், அதனை எங்கு வைத்தியம் பார்த்தும் தீர்க்க முடியவில்லை என்றும், நீங்கள் வந்து தான் அதனை குணப்படுத்த வேண்டும் என்றும் சொல்லி, தனது சொந்த செலவில் சாமியாரை சிங்கப்பூர் அழைத்துச் சென்றார்.

அப்படி இவர் சென்ற இடத்தில், ஏற்கனவே சிங்கப்பூரைச் சேர்ந்த ஹல்க் சாமியார் ஒருவர் அருள் வாக்கு கூறி வந்திருக்கிறார். இந்நிலையில், இருவருக்கிடையே யார் ஒரிஜினல் சாமியார் என்ற போட்டி எழுந்துள்ளது. இது கைக்கலப்பாக மாற, பட்டுக்கோட்டை சித்தரை அடித்த சிங்கப்பூர் சாமியார், அவர் தப்பி ஓடிவிடக் கூடாது என்பதற்காக கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கி பிடித்துக் கொண்டார்.

மேலும் படிக்க – ‘சூ’ என பெயர் வைத்துக் கொண்டு ‘ஷூ’வில் கேமரா.. ஸ்கர்ட் அணியும் பெண்களே குறி.. 3,200 வீடியோவுடன் சிக்கிய சிங்கப்பூர் மருத்துவர்!

அதுமட்டுமின்றி, கதவையும் பூட்டி வைத்துக் கொண்டு, ‘என் கண்களை நன்றாக உற்றுப்பார்’ என்று பாடம் எடுக்க, சித்தர் மிரண்டுபோனார். பிறகு, அவருடன் சிங்கப்பூர் சென்ற பெண், கதவை திறந்துவிட்டதும், ‘எங்க ஏரியாவுக்கு வந்து பாரு’ என்ற ரீதியில் சித்தர் பேசிக் கொண்டே வெளியே செல்ல, நொடிப் பொழுதில், சித்தரின் வேட்டியை சிங்கப்பூர் சாமியார் உருவிவிட்டார். இதனால், உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் ஓடும் நிலைக்கு பட்டுக்கோட்டை சித்தர் தள்ளப்பட்டார்.

இதையடுத்து மோசமான வார்த்தைகளால் சிங்கப்பூர் சாமியாரை திட்டிவிட்டு, நிர்வாணமாகவே காரில் ஏறிச் சென்று காவல்துறையில் புகார் அளித்துவிட்டு, 15, தேதி தமிழகம் திரும்பியதாக அவரது மகன் சுரேந்தர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் வெளியில் யாருக்கும் தெரியாது என்று சித்தர் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சிங்கப்பூர் சாமியாரின் பக்தர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக தளங்களில் வெளியிட, சித்தரை தெய்வமாக பாவித்த பக்தர்கள் இப்போது செய்வதறியாது உட்கார்ந்துள்ளனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts