TamilSaaga

“சேவைகளை மீண்டும் தொடங்குகிறோம்” : நவம்பர் 29 முதல் தமிழகம் – சிங்கப்பூர் சேவைகளை தொடங்கும் Indigo

இந்தியாவுடனான சிங்கப்பூரின் தடுப்பூசி பயண பாதை (VTL) நவம்பர் 29 அன்று தொடங்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தினசரி ஆறு நியமிக்கப்பட்ட விமானங்கள் சிங்கப்பூர் பறக்கவுள்ளன. இந்தியாவில் இருந்து குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பயண அனுமதிகளுக்கான (VTP) விண்ணப்பங்கள் மூலம் apply செய்து சிங்கப்பூர் வரலாம்.

இதையும் படியுங்கள் : கணவனுக்கும் மனைவிக்கும் சிறை

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே VTL அல்லாத விமானங்களை விமான நிறுவனங்கள் இயக்கலாம், இருப்பினும் VTL அல்லாத விமானங்களில் பயணிப்பவர்கள் நடைமுறையில் உள்ள பொது சுகாதாரத் தேவைகளுக்கு உட்பட்டு இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் Scoot நிறுவனங்கள் இந்திய சிங்கப்பூர் சேவையை தொடங்கியதை தொடர்ந்து தற்போது இண்டிகோ நிறுவனமும் இருநாட்டு சேவையை தொடங்கியுள்ளது.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே Travel Bubble சேவை தொடங்கியதை அடுத்து, இண்டிகோ நிறுவனம் வாரத்திற்கு மொத்தம் 3,618 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1,624 இருக்கைகள் சென்னை – சிங்கப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள திறன் சிங்கப்பூர் செல்வதற்கு VTL அல்லாத நிபந்தனைகளின் கீழ் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. “நாங்கள் தொற்றுநோயிலிருந்து வெளியே வரும்போது, ​​Travel Bubble ஒப்பந்தத்தின் கீழ் சிங்கப்பூருக்கு விமானங்களை மீண்டும் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

சர்வதேச பயண தேவையை மெதுவாக மீண்டும் கொண்டு வருவதற்கு ​​Travel Bubble ஏற்பாட்டின் கீழ் சர்வதேச இணைப்பு உதவியாக உள்ளது. நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது, மேலும் இது இந்தியா மற்றும் சிங்கப்பூர் குடிமக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக எளிதாக பயணிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறினார்.

Related posts