TamilSaaga

தெலுக் பிளாங்கா ரைஸ் கோர தீ விபத்து.. துளி அச்சமின்றி தீயை அணைத்த வீரமங்கை “கங்காதேவி” – பெருமை கொள்ளும் சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கடந்த மாதம் ஜனவரி 29 அன்று அதி­காலை 4.45 மணிக்கு, பிளாக் 39 தெலுக் பிளாங்கா ரைஸில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக 73 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த தீயில் சிக்கி காயமடைந்த 48 வயது பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிஇதுகுறித்து கிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

SCDF வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும், விஷயமறிந்த சம்பவ இடத்திற்கு SCDF சென்றபோது, அந்த குடியிருப்பு பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த குடியிருப்பின் 10 வது மாடியில் உள்ள ஒரு வீடு முழுவதுமாக தீக்கிரையானதாகவும் கூறப்பட்டது.

அந்த தீயை அணைத்ததில், சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­காரி லெஃப்டி­னென்ட் கங்­கா­தேவி ரௌட்­டன் முக்கிய பங்காற்றினார். தீ ஏற்பட்ட இடத்தை அடைந்­த­தும், புளோக்­கின் 10வது மாடி­யி­லி­ருந்து ஆரஞ்சு நிறத்­தில் தீப்பிழம்­பு­கள் ஆக்­ரோ­ஷ­மாக வெளியானதை கங்காதேவி பார்த்தார். தீயின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், கண்­ணாடி மற்­றும் கான்­கிரீட் துண்­டு­கள் தெறித்து கீழே விழுந்தன.

மேலும் படிக்க – Singapore Budget 2022: இக்கட்டான நேரத்தில் வெளியாகும் சிங்கப்பூர் பட்ஜெட் – பிப்.18 பிற்பகல் 3.30 மணிக்கு நேரலை – Live-ல் பார்ப்பது எப்படி?

இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள அலெக்­சாண்­டிரா தீய­ணைப்பு நிலை­யத்­தின் துணைப் படைப் பிரிவின் தலை­வ­ரான 35 வயது லெஃப்டி­னென்ட் கங்­கா­தேவி, “எனது 15 ஆண்டு தீயணைப்பு அனு­பவத்­தில் நான் பார்த்ததிலேயே மிகப் பெரிய தீ விபத்து சம்­ப­வம் இதுதான். அந்த வீட்டில் தீ கொழுந்துவிட்­டெ­றிந்தது. ஆனால், நான் வீட்­டுக்­குள் செல்ல பயப்­ப­ட­வில்லை. அதேசமயம் அங்கே வெப்பம் மிக மிக அதிகமாக இருந்தது. அந்­தத் தீயில் எனது உடல் உருகு­வ­து­போல நான் உணர்ந்­தேன். இப்படியொரு வெப்பத்தை நான் அனுபவித்ததில்லை” என்­றார்.

அந்த இக்கட்டான நேரத்தில், தனது மொபைலைப் பார்த்த கங்­கா­தேவி, தமது 12, 10 வயது மகள்­கள் தனக்கு பல­முறை Call செய்திருந்ததை அறிந்தார். அம்மாவுக்கு அந்த ஆபத்தும் நேரவில்லை என்பதை உறுதி செய்வதற்காக மகள்கள் அடிக்கடி மொபைலில் அழைத்திருக்கின்றனர். கங்­கா­தே­வி­யின் கண­வ­ரும் ஒரு தீயணைப்­பு வீரர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் படிக்க – Exclusive: கத்தார் நாட்டில் Two Wheeler License உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு – வரும் பிப்.11 தஞ்சையில் நேர்காணல்

இதுகுறித்து மேலும் பேசிய கங்காதேவி, “இந்த தீயணைப்பு பணிக்கு பிறகு நான் எனது வீட்டிற்கு சென்றதும், எனது குடும்­பத்­தி­னர் எனக்குப் பாலும் நீரும் கொடுத்­த­னர். என் இளைய மகள் எனது கை கால்­க­ளைப் பிடித்துவிட்டு நான் நல­மாக இருக்­கி­றேனா என்று என்னிடம் கேட்டு உறுதி செய்துகொண்டார். பிறகு நான் அவர்களிடம் தீயை அணைத்து பொது மக்களை காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தினேன்” என்றார்.

தீரமுடன் செயல்பட்டு டெலோக் பிளாங்கா ரைஸில் ஏற்பட்ட தீ விபத்தை முடிந்த வரை விரைவாக அணைத்த கங்காதேவிக்கு நாமும் சல்யூட் வைக்கலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts