TamilSaaga

“சிங்கப்பூரில் 4 நாட்களாக குடும்பத்தால் தேடப்பட்ட முதியவர்” – SingPost சென்டர் அருகே இறந்துகிடந்த பரிதாபம்

சிங்கப்பூரில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் ஒருவர் இறந்துள்ளார். அவரது உடல் சிங்போஸ்ட் மையத்தில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த அந்த முதியவரின் மருமகள், ஆ ஜாய் என்பவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அன்று தனது பேஸ்புக்கில் இந்த நிகழ்வு குறித்து பொதுமக்களுக்குத் தெரிவித்தார்.

அவர் மாலை 7:16 மணிக்கு வெளியிட்ட பதிவில் அவருடைய மாமனார் சோ எங் தோங் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது குறித்து கூறினார். ஹேக் சாலையில் உள்ள குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்க போலீசார் சென்றனர் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஜாய் தனது பதிவில், தன்னால் மேலும் தகவலை வெளிப்படுத்த முடியவில்லை என்றும், ஆனால் போலீசார் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக அனைவரும் எங்களுக்கு செய்த உதவிகளுக்கு நன்றி என்று அவர் அந்த பதிவில் தெரிவித்தார். தற்போது அந்த முதியவரின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

Related posts