சிங்கப்பூரில் 514 வது தொகுதி, பெடோக் நார்த் அவென்யூ 2ல் உள்ள ஒரு பிரிவில் 74 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டியின் HDB பிரிவில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்த அப்பெண்ணின் அண்டை வீட்டார் உடனைடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். லில்லி என்று அழைக்கப்படும் அந்த மூதாட்டி அந்த வீட்டில் தனியாக 2 பூனைகளுடன் தான் வாழ்ந்துவந்தார் என்று கூறப்படுகிறது. இரண்டி வாரங்களாக அவரை யாரும் வெளியில் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 4), அப்பகுதியில் உள்ள சூ என்ற 56 வயது பெண்மணியும் மற்றொரு அயலவர் திரு. வீ சீவ் லை என்பவரும் லில்லியின் பூட்டப்படாத முன் கதவைத் திறந்துள்ளார்.
போலீஸை அழைத்த திரு வீ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறிய தகவலில் “நான் கதவைத் திறந்தபோது, கடுமையான துர்நாற்றம் வெளியேறியது. அவரது உடல் எத்தனை நாட்கள் இருந்தது என்று தெரியவில்லை. ஜன்னல்கள் மற்றும் கதவுகள் எப்போதும் மூடப்பட்டிருக்கும்” என்று அவர் கூறினார். மேலும் டெலிவரி மேன் அளித்த தகவலில் லில்லி பொதுவாக தனியாக இருப்பதாகவும், சீனப் புத்தாண்டின் போது கூட அவருக்கு பார்வையாளர்கள் இருப்பதை அவர் கண்டதில்லை என்றும் கூறினார்.
அவரது மரணத்தில் சதேகத்திற்குரிய விஷயங்கள் எதுவும் இல்லை என்று நம்பப்படுவதாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.