TamilSaaga

சிங்கப்பூர்.. 2 நாட்களாக தேடப்படும் காணாமல் போன சிறுவன் : தீவிரமாக தேடும் போலீஸ் – பொதுமக்களும் உதவலாம்

சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) மாலை முதல் காணாமல் போன 13 வயது சிறுவனை தேடும் பணியில் பொதுமக்கள் தங்கள் பணியை அளிக்குமார் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பிரையன் டான் ஷி யோங் என்று அந்த சிறுவன், கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் ஃபாரர் பூங்காவில் உள்ள ஸ்டர்டீ சாலையில் தனது சைக்கிளுடன் காணப்பட்டார் என்று சிங்கப்பூர் போலீஸ் படை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சிறுவன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் தகவல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெறப்படும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆகவே இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts