TamilSaaga

முதல் நாள் திருவிழாவில் வெள்ளி ரதத்தில் அசைந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த மாரியம்மன்..!

சிங்கப்பூரின் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும் தீமிதி திருவிழாவானது நாளை நடைபெறுவதை ஒட்டி வெள்ளிக்கிழமையான நேற்று முதல் நாள் திருவிழாவை ஒட்டி மாரியம்மன் வெள்ளி ரதத்தில் வலம் வந்து மக்களுக்கு அருள் பாலித்தார். வெள்ளி ரதம் ஆனது அங்கிருந்து புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள 29 இடங்களில் ஒவ்வொரு இடமாக நின்று பக்தர்களின் காணிக்கைகள் மற்றும் மண்டகப் ஏற்றுக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் பலரும் கூட்டமாக கூடி அம்மனை தரிசித்து வழிபட்டனர். மேலும் அம்மன் வெள்ளி ரதத்தில் உலா வருவதினை வெளிநாட்டவர்கள் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.அது மட்டுமல்லாமல் தொலைபேசிகளில் ஆர்வத்துடன் பதிவு செய்தனர். நாளை தீமிதி திருவிழா நடைபெறுவதை ஒட்டி அதற்கான ஆன்லைன் முன்பதிவானது இன்றுடன் முடிவடைகின்றது .மேலும் தீமிதி திருவிழாவிற்கு வந்து முன்பதிவு செய்ய இயலாது என கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts