TamilSaaga

57 வயது நபருடன் திருமணம்.. விரக்தியோடு ஃபிரான்சில் இருந்து ஊருக்கு வந்தவருக்கு கிடைத்த “Gift” – கணவரை இழந்த பெண்ணுக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்கை!

புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டை சார்ந்த 57 வயது நபர், 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. புதுச்சேரியை சார்ந்த பாஸ்கல் என்பவர் தனது நண்பர்களுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 57 வயதான அவர் தனது உறவினரான கணவரை இழந்த 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

வாழ்க்கை ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் பிரகாசிக்க தொடங்கலாம். அதை யாராலும் கணிக்க முடியாது என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் பாஸ்கல். இவர் தனது நண்பர்களுடன் பிரான்ஸில் செட்டிலாகிவிட்டார். ஆனால், தனக்கென ஒரு துணை இல்லையென்ற ஏக்கம் இவருக்கு இருந்து வந்தது. இந்நிலையில், புதுச்சேரி வந்த பாஸ்கல், தனது உறவினர்களிடம் தனக்கான துணை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவரது தனிமையை புரிந்து கொண்ட உறவினர்கள், பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். அப்போது தான், கணவரை இழந்த 41 வயதான பெண் ஒருவர், பாஸ்களை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இருவரும் நேரில் சந்தித்து பல விஷயங்களை மனம் விட்டு பேசியுள்ளனர். இதில், ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டதால், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

மேலும் படிக்க – யாருமே எதிர்பார்க்காத முடிவு.. கல்லூரி முடித்த உடனே சிங்கப்பூர் ராணுவத்தில் இணைந்த “சிங்க மகள்” – கட்டுப்பாடுகளை வெறுத்தவர் இன்று மாஸ் காட்டும் அதிகாரி!

அதன்படி, புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் சமீபத்தில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இதில் சோகம் என்னவெனில், சமூக தளங்களில் பரவிய இந்த வீடியோவில், 75 வயது முதியவருக்கு, 27 இளம் பெண்ணுக்கும் திருமணம் என்று செய்திகள் பரப்பப்பட்டது. விசாரித்ததில், அந்த தகவல் பொய் என்று பாஸ்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது திருமணம் முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்த தம்பதிகள் பிரான்ஸ் சென்று தங்கள் புதிய வாழ்க்கையை தொடங்க உள்ளதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts