TamilSaaga

”We will always love you” வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வீட்டில் நடந்த துக்க நிகழ்வு… வைரலாகும் பேஸ்புக் பதிவு

சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் மகன் மார்க் பாலகிருஷ்ணன், தனது 35 வார இறந்த குழந்தைக்கு எழுதி இருக்கும் முகநூல் பதிவு வைரலாகி இருக்கிறது.

விவியன் பாலகிருஷ்ணன் மருத்துவராகவும், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் உள்ளார். இவர் ஆளும் மக்கள் செயல் கட்சி (PAP) உறுப்பினராகவும், ஸ்மார்ட் நேஷன் புரோகிராம் அமைச்சராகவும் உள்ளார். விவியனுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

இதில் மார்க் பாலகிருஷ்ணனின் மூன்றாவது மகனும், விவியனின் பேரனுமான இவான் இறந்து பிறந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து மார்க் எழுதி இருக்கும் பேஸ்புக் பதிவு வைரலாக பரவி வருகிறது.

அந்த பதிவில், எங்கள் மூன்றாவது குழந்தை, இவான் புதன்கிழமை இறந்து பிறந்தார். எங்கள் குடும்பம் துக்கமும் மனவேதனையில் ஆட்கொண்டு இருக்கிறோம். 35 வாரங்களாக இவான் வளர்வதைப் பார்த்து, எரினும் ஈதனும் பாட்டு பாடி மகிழ்ச்சியாக இருந்தனர்.

விவியன் பாலகிருஷ்ணனின் பேஸ்புக் பதிவினை இங்கு பார்க்கலாம்

இவான் kick உணர்ந்தபோதும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடும்போது அவன் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தான். இவான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுத்தான். அது எங்கள் இதயங்களில் இருக்கும்.
அவனுடைய பெற்றோராகிய எங்களால் அவனைப் பராமரிக்கவும் வளர்க்கவும் கொடுத்து வைக்கவில்லை.

தற்போது இவான் சர்வவல்லமையுள்ள பரலோகத் தந்தையால் அரவணைக்கப்படுவான். எங்களால் செய்ய முடியாத அனைத்தையும் செய்யக்கூடியவர். நான் இவானுடன் குறுகிய நடைப்பயணத்தை மேற்கொண்டேன். பூங்காவிற்கு அல்ல, கல்லறைக்கு. நாங்கள் எப்போதும் உன்னை நேசிப்போம் எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவினை விவியன் பாலகிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அன்புக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு ஆழ்ந்த துக்கம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts