அதிவேகமாக வளர்ந்து வரும் நமது சிங்கப்பூர் நாட்டின் மீது, பிற நாட்டை சேர்ந்த மக்களுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்து வருகின்றது. குறிப்பாக அண்டை நாடான இந்தியர்களுக்கு, நமது சிங்கப்பூர் ஒரு இரண்டாம் தாயகமாக இருந்து வருகிறது. பணி செய்ய இங்கு வரும் பல நாட்டவர்க்கும், இங்கு குடியுரிமை பெறுவது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது.
ஆனால் சிங்கப்பூர் அரசும், குறிப்பிட்ட சில வகை பாஸ்களை அளிப்பதன் மூலம் பிற நாட்டை சேர்ந்த மக்கள் இங்கு வாழ வழிவகை செய்து வருகின்றது. அந்த வகையில் டிபெண்டண்ட் பாஸ் மூலம் சிங்கப்பூர் வந்து இங்கு வசிப்பவர்கள் பலர் உண்டு.
டிபெண்டண்ட் பாஸ் என்றால் என்ன?
பல வகையான பாஸ் பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் சிங்கப்பூர் அரசு வழங்கும் இந்த “டிபெண்டண்ட் பாஸ்” என்பது சிறப்பு வாய்ந்தது.
சரி அது என்ன டிபெண்டண்ட் பாஸ்? சிங்கப்பூருக்குள் எம்பிளாய்மென்ட் பாஸ் அல்லது S பாஸ் மூலம் வருபவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள் சிங்கப்பூரில் அவர்களுடன் இணைந்து வாழ இந்த டிபெண்டண்ட் பாஸ் அனுமதிக்கிறது.
தகுதியுடையவர்கள் யார் யார்?
சிங்கப்பூரில் S பாஸ் மற்றும் எம்பிளாய்மென்ட் பாஸ் பெற்று வந்து பணி செய்து கொண்டிருக்கும் நபர்களின் சட்டப்பூர்வமான வாழ்கை துணை, அல்லது 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத அவர்களது குழந்தைகள் (சட்டப்பூர்வமாக தத்தெடுத்த குழந்தைகளும் அடங்குவர்) இந்த பாஸிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
சிங்கப்பூரில் பணி செய்யும் அந்த நபர் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் மட்டுமே இந்த டிபெண்டண்ட் பாஸிற்கு விண்ணப்பிக்க முடியும். சிங்கப்பூர் பணி செய்து கொண்டிருக்கும் நபரின் பாஸ் முடியும் காலம் அல்லது அதற்கு குறைவாக விண்ணப்பதாரர் கோரும் காலம் வரை இந்த பாஸ் செல்லுபடியாகும்.
சிங்கப்பூரில் குறையும் கோவிட் 19 தொற்று – அமைச்சகம் தந்த குட் நியூஸ்!
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
சட்டப்பூர்வ வாழ்க்கை துணை என்றால், அவர்களது திருமண சான்றிதழ் கட்டாயம் விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டும். திருமணமாகாத 21 வயதுக்கு உட்பட குழந்தைகள் என்றால், பெற்றோரின் பெயர் இடம்பெற்றுள்ள பிறப்பு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். இதுவே சட்டப்பூர்வமாக தத்தெடுக்க குழந்தை என்றால், தத்தெடுத்த சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். மேலும் இந்த டிபெண்டண்ட் பாஸிற்கு விண்ணப்பிக்க 105 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும்.