TamilSaaga

சிங்கப்பூர் River Valley பள்ளி கொலை வழக்கு? மாணவனிடம் ‘கோடாரி’ எப்படி கிடைத்தது? – விளக்கம் அளித்த அமைச்சர்

நேற்று சிங்கப்பூரில் River Valley என்ற உயர்நிலைப்பள்ளியில் சக மாணவர் ஒருவரின் மரணம் தொடர்பாக நான்காம் பருவ மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று திங்கட்கிழமை (ஜூலை 19) காலை 11.40 மணியளவில் பள்ளி அமைந்துள்ள 6 பூன் லே அவென்யூவில் இருந்து தங்களுக்கு உதவிக்கோரி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை தெரிவித்தது. தகவல் அறிந்து அந்த பள்ளிக்கு உடனடியாக விரைந்த போலீசார் பள்ளியின் கழிப்பறையில் ஒரு முதல் பருவ மாணவன், உடலில் காயங்களுடன் அசைவற்ற நிலையில் இருந்ததை கண்டுள்ளனர்.

அந்த 13 வயது மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக கூறினார். மேலும் அந்த சம்பவ இடத்தில் இருந்து ஒரு கோடரியை போலீசார் கைப்பற்றினர். அதன் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டான்.

இந்நிலையில் அந்த மாணவனுக்கு எப்படி கோடாரி கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த நிகழ்வு குறித்து பதில் அளித்துள்ள சிங்கப்பூரின் சட்ட அமைச்சர் திரு. கே. சண்முகம் “இதுபோன்ற நிகழ்வு ஒரு பள்ளியில் நடைபெற்றது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அந்த மாணவன் அந்த கோடாரியை இணைய வழியில் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் இந்த வழக்கில் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Related posts