TamilSaaga

சிங்கப்பூரில் கட்டிடத்தை எரிக்க முயன்ற நபர்.. கேமராவில் சிக்கியதால் வளைத்து பிடித்த போலீஸ்

சிங்கப்பூரில் யுபி சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தை எரிக்க முயன்ற குற்றத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 66 வயது நபர் கைது செய்யப்பட்டதாக பொலீசார் நேற்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஜூலை 11 ம் தேதி மாலை 4.05 மணியளவில் யுபி சாலை 1 இல் உள்ள ஒரு தொழிற்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அவர்களை எச்சரித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப விசாரணையில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அவரை கைது செய்வதற்கு முன்னர், அந்த நபரின் அடையாளத்தை விரிவான விசாரணைகள் செய்ததோடு மட்டுமல்லாமல், கேமராக்களின் படங்களின் உதவியுடன் போலீசார் அந்த நபரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினர்.

ஒரு கட்டிடத்தை அழிக்கும் நோக்கத்துடன் தீ விபத்து செய்த குற்றத்திற்காக, அந்த நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts